Skip to main content

தூண்டில் வளைவு இருந்திருந்தால் 30ம் உடைந்திருக்காதே!

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

பல வருடக் கோரிக்கையான தூண்டில் வளைவு இல்லாததால், இன்று (01.12.2019) வீசிய சூறைக்காற்றுக் காரணமாக ஒன்றரைக்கோடி மதிப்பிலான 30- க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்து கரை ஒதுங்கின.


வடகிழக்குப் பருவமழையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதில் பல இடங்களில் வெள்ள நீர் உட்புகுந்து குடியிருப்புகளை ஆக்கிரமித்து அச்சம் ஏற்படுத்தி வரும் வேளையில், மழைக்காக துறைமுகத்தில் கட்டப்பட்டிருந்த படகுகளும் தப்பவில்லை. இன்று மண்டபம் பகுதிக்குட்பட்ட தென்கடல் பகுதியில் வீசிய பலத்த சூறைக்காற்று காரணமாக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 25 படகுகள் சேதமடைந்தது நீருக்குள் அமிழ்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், 7 படகுகள் மட்டும் கரையை அடைந்தது. கரை ஒதுங்கிய படகுகளையும், கடலில் அடித்து செல்லப்பட்ட படகுகளையும் தேடி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மீனவர்கள். 

ramanathapuram district fishermans boat damaged sea


"கடல் அரிப்பு என்பது இங்கு சர்வசாதாரணமாகிவிட்டது. இப்பகுதியில் தூண்டில் வளைவு வேண்டுமென பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தோம். அரசும் செவி மடுக்கவில்லை. இங்கு தூண்டில் வளைவு இருந்திருந்தால் இப்பிரச்சனை ஏற்பட்டிருக்காதே.." என்கின்றனர் அப்பகுதி மீனவர்கள். சேதமடைந்தது சுமார் 30 படகுகள் எனவும், அதனின் மதிப்பு ஒன்றரைக் கோடி இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.