Published on 19/02/2020 | Edited on 19/02/2020
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் இருந்து சட்டமன்றத்தை முற்றுகையிடும் பேரணி தொடங்கியது. இதில் இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் ஏராளமானோர் பேரணியில் பங்கேற்றுள்ளனர். பேரணியின் காரணமாக சென்னை அண்ணாசாலைப் பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.