Skip to main content

சேலம் மத்திய சிறையில் போலீசார்  திடீர் சோதனை!

Published on 28/10/2018 | Edited on 28/10/2018
sc


சேலம் மத்திய சிறையில் போதைப்பொருள்கள் புழக்கம் தொடர்பாக புகார்கள் வந்ததன்பேரில், போலீசார் நேற்று (அக்டோபர் 27, 2018) திடீர் சோதனை நடத்தினர். சோதனையில், தடை செய்யப்பட்ட பொருள்கள் ஏதும் சிக்காததால் போலீசார் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.


சென்னை புழல் சிறைச்சாலையில் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள், பீடி, சிகரெட், செல்போன் புழக்கம் இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. அதையடுத்து, கடந்த மாதம் புழல் சிறையில் போலீசார் நடத்திய சோதனையில் அங்கிருந்து பல மூட்டை பிரியாணி அரிசி, 15க்கும் மேற்பட்ட டிவிக்கள், ரேடியோக்கள், செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.


அதன் தொடர்ச்சியாக சேலம், கோவை, கடலூர் ஆகிய மத்திய சிறைச்சாலைகளிலும் கடந்த செப். 16ம் தேதி போலீசார் சோதனை நடத்தினர். 


இந்நிலையில், இன்று சேலம் மத்திய சிறையில் மீண்டும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சிறைச்சாலையில் 150 தண்டனைக் கைதிகள்¢ உள்பட 850க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.


அதிகாலை 5.55 மணிக்கு, சேலம் வடக்குக் குற்றப்பிரிவு உதவி கமிஷனர் தினகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அம்பிகா, பொன்ராஜ் மற்றும் 35 போலீசார் சிறைச்சாலைக்குள் அதிரடியாக நுழைந்தனர். கைதிகள் அடைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பிளாக்குகளிலும் சென்று சோதனை நடத்தினர். கைதிகளை சிறைச்சாலை வராண்டாவிற்கு வரவழைத்தும் சோதனை நடந்தது.


இதுபோன்ற சோதனைகளின்போது செல்போன், போதைப்பொருள்கள் ஏதாவது இருந்தால் அவற்றை சிறைச்சாலையில் உள்ள சாக்கடை கால்வாய், கழிப்பறைக்குள் வீசி விடுவார்கள். அதனால் சாக்கடைக் கால்வாய்கள், தண்ணீர் தொட்டிகள், சமையல் அறை ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது.


காலை 7.30 மணி வரை சோதனை நடந்தது. இந்த திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட பொருள்கள் எதுவும் சிக்கவில்லை. இதனால் போலீசார் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். 


இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''சேலம் மத்திய சிறை வார்டன்களே தடை செய்யப்பட்ட பொருள்களை கைதிகளுக்கு கொடுத்து கல்லா கட்டி வருவதாக புகார்கள் வந்தன. அதன்பேரில்தான் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டது. சிறை வார்டன்கள் இந்த சோதனையை முன்பே யூகித்து இருந்தார்களோ என்னவோ, கைதிகளிடம் இருந்து தடை செய்யப்பட்ட பொருள்களை வாங்கியிருக்கலாம். ஆனாலும், தொடர்ந்து ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறோம்,'' என்றார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.