Skip to main content

மாணவிகளின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம்: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போலீசார் அறிவுரை

Published on 06/10/2018 | Edited on 06/10/2018
Do not play in the lives of the students


விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ நிறுத்தம் உள்ளது. இங்கு உள்ள ஆட்டோக்களில் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் இளைஞர்களுடன் அமர்ந்திருக்கின்றனர். இவர்கள் காதல் செய்வதற்காக தங்களது ஆட்டோவில் அவர்களை அமர வைத்து அதற்கான கட்டணத்தை பெறுகிறார்களாம். மேலும் காதலர்களுக்குள் ஏதேனும் பிரச்சனை வந்தால் மிரட்டி சிலர் பணம் பறிப்பதும் நடக்கிறது. சில மாணவிகளை சில ஆட்டோ டிரைவர்கள் தங்களுக்கு சாதகமாக காம இச்சைக்கு பயன்படுத்திக்கொள்வதாக காவல்துறையினருக்கு புகார்கள் சென்றுள்ளது.
 

உடனடியாக அனைத்து ஆட்டோ டிரைவர்களையும் அழைத்த காவல்துறையினர், போக்குவரத்து விதிமுறை, பொதுமக்களிடம் அணுகுவது எப்படி, பொதுமக்களுக்கு நண்பனாக இருப்பது எப்படி என்று ஆலோசனை வழங்கினர். மேலும் புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோவில் காதல் ஜோடிகளை அமர வைப்பதாகவும், அவர்களில் சிலர் பள்ளி, கல்லூரி மாணவிகள் எனவும் கூறப்படுகிறது. மாணவிகளின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம். இதுபோன்ற செயல்களை தவிர்த்திட வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளனர். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். மேலும் ஆட்டோ நிறுத்துவதை வேறு இடத்திற்கு மாற்றவும் ஆலோசனை நடந்தி வருகிறார்கள். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

தனியார் பல்கலைக்கழகம் எதிரே கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
cannabis chocolates seized from snack shop opposite private university.

வேலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழங்குவதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

காட்பாடி டி.எஸ்.பி. சரவணன் உத்தரவின் பேரில், காட்பாடி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் (வி.ஐ.டி.) எதிரே உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஸ்நாக்ஸ் விற்பனை செய்யும் கடையில் சோதனை மேற்கொண்டனர். அந்த கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 13 பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வைத்திருந்த 520 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குஞ்சன் குமார் கம்டி (21) , மனிஷ் குமார் கம்டி(21)  ஆகிய இருவரை காட்பாடி போலீசார் கைது செய்தனர். 

இந்தப் பகுதியில் இதுபோல் பல கடைகளிலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதும் அதை கல்லூரி மாணவ - மாணவிகள் வாங்கி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை காவல்துறை தொடர்ந்து ஆய்வு மூலம் பறிமுதல் செய்து அதனை விற்பனை செய்பவர்களும் அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.