Skip to main content

அருங்காட்சியகங்கள் துறை சார்பில் சிறப்புக் கண்காட்சி துவக்கம் (படங்கள்) 

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

சென்னை அரசு அருங்காட்சியக வளர்கலை கூடத்தில் இன்று (22.12.2021) காலை சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு எனும் சிறப்புக் கண்காட்சி துவக்கிவைக்கப்பட்டது. 

 

அருங்காட்சியகங்கள் துறை சார்பில் இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு என்ற சிறப்புக் கண்காட்சி, ஆதிச்சநல்லூர் அரும்பொருட்கள் மற்றும் கீழடி அகழாய்வு மாதிரிகள் கண்காட்சி துவக்கிவைக்கப்பட்டன. 

 

இந்நிகழ்ச்சியினை தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கிவைக்க இருந்தது. இந்நிலையில், அமைச்சர் வர முடியாத காரணத்தால் துறைச் செயலாளர் இக்கண்காட்சியைத் துவக்கிவைத்தார். 

 

 

சார்ந்த செய்திகள்