Skip to main content

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Old man gets 30 years in prison for misbehaving with girl

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிளித்தான் பட்டறை பகுதியை சேர்ந்தவர் அப்துல்கனி(55) இவர் தமிழ்நாடு போக்குவரத்து கழக முன்னாள் ஊழியராக இருந்திக்கிறார். அப்துல்கனி, 2022-ம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பனின் 6- வயது மகளை சாக்லெட் கொடுத்து ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் காட்பாடி காவல்துறையினர் அல்துல்கனியை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், அப்துல்கனி சிறையில் இருக்கும் நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தது உறுதியான நிலையில், அப்துல்கனிக்கு 30-ஆண்டுகள் சிறை தண்டனையும், 20-ஆயிரம் அபராதமும் விதித்து வேலூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டார்.

சார்ந்த செய்திகள்