Skip to main content

நிர்மலா தேவி வழக்கில் சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை... -உயர்நீதிமன்ற மதுரை கிளை

Published on 27/02/2019 | Edited on 27/02/2019


 

nirmaladevi




நிர்மலா தேவி வழக்கில் சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை. வழக்கில் 3 பேரை மட்டுமே விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் ஓராண்டாக நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்காதது ஏன்? கொலை குற்றவாளிகளுக்கு ஜாமீன் தரும் நிலையில், நிர்மலா தேவிக்கு ஓராண்டாக ஜாமீன் தர மறுப்பது ஏன்? நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கி விடுவிப்பதில் ஏதேனும் அச்சம் உள்ளதா? என பல கேள்விகளை எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை,  நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்