Skip to main content

நிகழ்ச்சிகளில் இருந்து தொடர்ந்து பாதியில் வெளியேறும் நாகை மாவட்ட ஆட்சியர்!

Published on 10/10/2018 | Edited on 10/10/2018

நாகை மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்ட அரசு இரத்ததான முகாமில் ஒரு சிலருக்கு மட்டுமே பாராட்டு சான்றிதல் வழங்கபடுவதாக கொடையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் நாகை மருத்துவமனையில் பரபரப்பு ஏற்படுத்தியது.

 

தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தைமுன்னிட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், இரத்ததான கொடையாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  நிகழ்ச்சியில் தொடர்ந்து ரத்ததானம் வழங்கி சேவை செய்துவரும் நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடையம் வழங்கி கௌரவித்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறியதை தொடர்ந்து மீதமுள்ள கொடையாளர்களுக்கு மருத்துவர்களால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  

 

collector

 

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அப்போது மருத்துவர்களிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு சிலருக்கு மட்டுமே பாராட்டு சான்றிதல் வழங்கபடுவதாகவும், வருடத்திற்கு 1000 யூனிட்  இரத்ததானம் வழங்கும் தங்களை மாவட்ட நிர்வாகம் அவமதிப்பதாகவும் கூறி நிகழ்ச்சியை விட்டு திடுதிபுவென வெளியேறினர். 

 

இதனால் அரசு நிகழ்ச்சி பாதியிலேயே முடிந்ததால், நாகை மாவட்ட அரசு மருத்துவமனையில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

 

மாவட்ட ஆட்சியர் இந்த நிகழ்சியில் மட்டும் வெளியேறிவிடவில்லை, பெரும்பாலான நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேறி நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை நோகடிப்பது அவரது வாடிக்கை, விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டத்தில் அவர் கலந்துகொள்வதை ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து தவிர்த்து வந்தார், பிறகு விவசாயிகளின் தொடர் போராட்டத்தினால் குறைத்தீர்ப்பு கூட்டத்தில் கலந்துகொண்டார், ஆனாலும் விவசாயிகள் கோரிக்கைகளை கூறும் போது கிளம்பிவிடுவார். அதேபோல் உள்நாட்டு மீனவர் நிகழச்சியில் கலந்துகொண்டவர் பாதியிலேயே வெளியேறியதால் அங்கு வந்திருந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதுபோல் ஏராளமான நிகழ்வுகளை சொல்லிக்கொண்டே போகலாம்,

 

collector

 

மாவட்ட ஆட்சியர், ஆட்சியராக இருப்பதைவிட அதிமுக அமைச்சரோடு நெருக்கமாக இருப்பதைத்தான் விரும்புகிறார், அதே போல் தனியார் பள்ளி, கல்லூரி, நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார். மாவட்ட ஆட்சியர் நாகை மாவட்ட அதிமுகவில் அறிவிக்கப்படாத அதிமுக மாசெவாகவே செயல்படுகிறார்." என்கிறார்கள் சமுக ஆர்வளர்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.