Skip to main content

"படப்பிடிப்பு தளத்தில் நடந்ததை எடுத்துக் கூறினேன்"- நடிகர் கமல்ஹாசன் பேட்டி!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் மூன்று பேர் இறந்தது தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன் அடிப்படையில் இன்று (03/03/2020) காலை சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். 

indian 2 film incident actor kamal hassan press meet

அவரிடம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி தலைமையிலான காவல்துறையினர் சுமார் 02.30 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், "இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்ததை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் எடுத்துக் கூறினேன். விபத்தில் உயிர் தப்பியோரில் நானும் ஒருவன்; இறந்த மூன்று பேருக்கு செய்யும் கடமையாக கருதி ஆஜராகி விளக்கமளித்தேன். சினிமாத்துறையில் மீண்டும் விபத்து ஏற்படாமல் தடுப்பது குறித்து போலீசாரிடம் ஆலோசனை செய்தேன்." இவ்வாறு பேசினார். 

 

சார்ந்த செய்திகள்