Skip to main content

கரும்பு தோட்ட மின்வேலியில் சிக்கி விவசாயத் தொழிலாளி உயிரிழப்பு!!

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

incident in vellore

 

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள வேப்பூர் கிராமத்தில், மின்சாரம் தாக்கி விவசாயத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கரும்பு தோட்டத்தில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கிய விவசாயத் தொழிலாளியான ரவி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மின்சார வேலியில் தொழிலாளி ஒருவர் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று விலங்குகளுக்கு வைக்கப்படும் மின்சார வேலியில் சிக்கி மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்வதால் இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்