Skip to main content

குடுகுடுப்பைக்காரர் செய்த மோசடி... உயிரைவிட்ட இளம்பெண்!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

incident in thiruchy

 

திருச்சியில் குடுகுடுப்பைக்காரரால் மோசடி செய்து ஏமாற்றப்பட்ட பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்தவர் சுகந்தி. இவருக்குத் தாலி தோஷம் இருப்பதாகவும் அதனால் தாலிக்குப் பூஜை செய்தால் தோஷம் நிவர்த்தியாகும் எனவும் குடுகுடுப்பைக்காரர் ஒருவர் கூறியுள்ளார். இதனை நம்பிய சுகந்தி, அவரது ஒன்றரை பவுன் தாலிச் சங்கிலியைக் குடுகுடுப்பைக்காரரிடம் கொடுத்துள்ளார். அதனை மோசடி செய்து அவர் ஏமாற்றி எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், தாலிச் சங்கிலியைப் பறிகொடுத்ததை உணர்ந்த சுகந்தி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுகந்தி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாக, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சுகந்தியின் உடலைக் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். குடுகுடுப்பைக்காரரால் ஏமாற்றப்பட்ட பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்