Skip to main content

தேமுதிக தலைமை கழகத்தை குறிவைக்கும் மெட்ரோ ரயில் நிர்வாகம்... மீண்டும் இடிக்கப்படுகிறதா விஜயகாந்த் மண்டபம்!!

Published on 12/12/2018 | Edited on 13/12/2018

 

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கோயம்பேட்டிலிருந்து மெட்ரோ ரயில் பாதைகளை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக வீடு, கடைகள் மற்றும் நிலங்களை கையகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

 

 Target

 

கையகப்படுத்தும் வீடுகள், கடைகள் மற்றும் நிலங்களுக்கு இழப்பீடுகளையும் வழங்க திட்டமிட்டு அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. நிலம் கையகப்படுத்துவதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருமண மண்டபமும் அடிபடுகிறது.  விஜயகாந்த் திருமண மண்டபம் இருக்கும் பகுதியில் தான் மெட்ரோ ரயில்  அண்டர்கிரவுண்ட் பணிகள் நடக்க உள்ளன. 

 

ஏற்கனவே திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது சாலை விரிவாக்கத்திற்காக விஜயகாந்த் திருமண மண்டபம் இடிக்கும் சூழல் ஏற்பட்டது. 

 

அப்போது தனது திருமண மண்டபத்தை வேண்டுமென்றே இடிகிறார்கள் என்று கூறி புதிய கட்சியை தொடங்கி திமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்து எம்எல்ஏ ஆனார் விஜயகாந்த். அதனைத் தொடர்ந்து நடந்த தேர்தலிலும் திமுகவை தொடர்ந்து தாக்கி அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சித் தலைவரானார்.

 

 Target

 

இந்த நிலையில் விஜயகாந்தின் திருமண மண்டபம் முற்றிலும் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்காக கையகப்படுத்தப்படும் என்ற செய்தி விஜயகாந்த் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 

தேமுதிகவின் அடையாளமாக கருதப்பட்ட இந்த மண்டபம் இடிக்கப்படவிருக்கிறது என்ற செய்தி விஜயகாந்த் தரப்புக்கு பெரும்  அதிர்ச்சியை தந்ததுடன் கட்சி அலுவலகத்தை வேறு எங்கு நடத்துவது என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு சண்முகப்பாண்டியன் பதில்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
shanmuga pandian press meet

விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப் பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது படைத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், உருவாகும் இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியலை மையப்படுத்தி ஆக்‌ஷன் ஜானரில் உருவாகிறது. யு. அன்பு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் இன்று சண்முகப் பாண்டியன் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி பிரேமலதா விஜயகாந்துடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த இல்லாமல் முதல் பிறந்தநாளைக் காண்கிறார். அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவரிடம் விஜய பிரபாகரரை போல் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் பதிலளித்த அவர்,  “நான் இப்போதைக்கு சினிமாவில் இருக்கிறேன். அண்ணன் அரசியலில் இருக்கிறார். அப்பாவின் ஒரு துறையை அண்ணன் எடுத்துக் கொண்டார். இன்னொரு துறையை நான் எடுத்துக்கொண்டேன்” என்றார். 

இதனிடையே சண்முகப் பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறிய வீடியோ ஒன்றை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளனர் படைத் தலைவன் படக்குழு. அப்படக்குழுவினரும் சண்முகப் பாண்டியனோடு இணைந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.  

Next Story

விஜயகாந்த் மறைந்து 100ஆவது நாள் - கண்ணீருடன் பிரேமலதா அஞ்சலி

Published on 06/04/2024 | Edited on 06/04/2024

 

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவிடத்திற்கு இன்றும் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்த் மறைந்து இன்றோடு 100 நாள்கள் நிறைவைடைகிறது. இதையொட்டி பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மகன் சண்முகபாண்டியன் உடனிருந்தார். அவருக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

படங்கள் - எஸ்.பி.சுந்தர்