Skip to main content

லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரிக்கு சிறை!

Published on 03/02/2021 | Edited on 03/02/2021

 

Imprisoned ... female civil servant who took bribe !!

 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான சமூக நலத்துறை அலுவலகம், விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. சின்ன சேலம் அருகிலுள்ள தாகம் தீர்த்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம்.

 

தனது மகளுக்கு திருமண உதவித் திட்டத்தின் கீழ் தாலிக்கு 8 கிராம் தங்கம், 50 ஆயிரம் நிதி உதவித் தொகை பெறுவதற்காக முறைப்படி ஏற்கனவே விண்ணப்பித்திருந்தார். இந்தநிலையில், அந்த விண்ணப்பத்தின் மீது விசாரணை நடத்தி, அரசுக்குப் பரிந்துரை செய்து, நிதி உதவி கிடைக்கப் பெறச்செய்ய வேண்டிய அதிகாரி மாவட்ட சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர். அதன்படி, இரு மாவட்டங்களில் விரிவாக்க நல அலுவலர் ஆக இருப்பவர் ஜெயலட்சுமி.

 

ராமலிங்கம் முறைப்படி அனுப்பிய திருமண உதவி கோரிய மனு ஜெயலட்சுமியிடம் விசாரணைக்கு வந்துள்ளது. விசாரணையின்போது ஜெயலட்சுமி, ராமலிங்கத்திடம் திருமண நிதி உதவித் தொகைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென்றால், எனக்கு 1,500 ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என்று கேட்டுள்ளார்.

 

இதுகுறித்து, ராமலிங்கம், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ராமலிங்கத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து ஜெயலட்சுமியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி, ராமலிங்கம் அந்த நோட்டுகளை நேற்று காலை சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜெயலட்சுமியிடம் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெயலட்சுமியை கையும் களவுமாகக் கைது செய்தனர்.

 

அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு ஜெயலட்சுமியை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், கடந்த இரண்டு தினங்களில் மட்டும் இதே போன்று திருமண உதவி கோரிய பயனாளிகளிடம் இருந்து 70 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற அரசு ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவிலுக்குச் சென்ற போது நேர்ந்த சோகம்; பெண்கள், மாணவிகள் 4 பேர் பலி

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
4 women who went to the temple drowned in the water and passed away

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா( 45) அவரது மகள் லலிதா (22). அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காவியா (18) அவரது 17 வயது தங்கை   உட்பட 4 பெண்கள் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுள்ளனர். வழிபாடு முடிந்த நிலையில் முனீஸ்வரன் கோவிலுக்கு அருகே உள்ள வேப்பூர் ஏரியில் உள்ள தண்ணீரில் நான்கு பெண்களும் இறங்கி உள்ளனர் 

ஏரியில் உள்ள சுழலில் சிக்கி நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கி கூச்சலிட்டுள்ளனர். மேலும் நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கிய நிலையில் அக்கம் பக்கத்தினர் இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா, ஆகிய நான்கு பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே பகுதியைச் சேர்ந்த அம்மா, மகள் மற்றும் சகோதரிகள் என நான்கு பெண்கள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

சகோதரிகள் இருவரை 5 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 Police arrested 4 people for misbehaving with two sisters

அருப்புக்கோட்டை - கல்லூரணியைச் சேர்ந்த பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ‘என்னுடைய தங்கை,  அருப்புக்கோட்டை பெர்கின்ஸ்புரத்தில் வசித்து வருகிறார். நாங்கள் இருவரும் குறிஞ்சாங்குளத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், எனது சம்பளப் பணத்தை வாங்குவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள என்னுடைய தங்கை வீட்டிற்குச் சென்றபோது, எங்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர் எங்களிடம், ‘உங்க மாமாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிருச்சு.’ என்று கூறி, எங்களை அழைத்துக் கொண்டு வாழ்வாங்கி காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்றார்.  அங்கு  மறைந்திருந்த  நான்கு பேரும், ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கி, அவர் கண் முன்னே எங்கள் இருவரையும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்.’  எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். டிஎஸ்பி ஜெகந்நாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர், இளம் பெண்களை அழைத்துச் சென்று விசாரணை  நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சேதுராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, ராஜ்குமாரும், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மற்ற நான்கு பேரும் கூட்டாளிகள் என்பதும், அதிலொருவன் 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ராஜ்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த 17 வயது சிறுவன், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் (வயது 26), சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலாஜி (வயது 26) மற்றும் இளம் பெண்களை அழைத்துச் சென்ற ராஜ்குமார்(24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பந்தல்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரைத் தேடி வருகின்றனர்.