Skip to main content

''என்னுடைய தமிழுணர்வுக்கு காரணமானவரை இழந்துவிட்டேன்'' - தொ.பரமசிவன் மறைவுக்கு சீமான் கண்ணீர் அஞ்சலி!

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

 '' I have lost the reason for my so much Tamil feeling '' - Seeman tearful tribute tho.paramasivan

 

தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன் (70) உடல்நலக் குறைவால் காலமானார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

 

தமிழில் இயங்கி வந்த முக்கியமான பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் தொ.பரமசிவன். 'அறியப்படாத தமிழகம்', 'பண்பாட்டு அசைவுகள்' போன்ற நூல்கள் அவரின் முக்கியப் படைப்புகளாகத் திகழ்கின்றன. தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தனது நூல்களின் மூலம் தேடித்தந்தவர். அவரது 'அழகர்கோயில்' நூல், கோயில் ஆய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் தற்போது வரை திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், அவரது மறைவு குறித்து, தனியார் தொலைக்காட்சியில் தனது இரங்கலை தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்றவர்களுக்கு இது ஒரு செய்தியாக இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படியில்லை. நான்  அவரிடம் படித்த மாணவன். இளையான்குடி டாக்டர்.சாகிர் உசேன் கல்லூரியில் அவர் தமிழ்த்துறை தலைவராக இருந்தார். அந்த நேரத்தில் நான் ரொம்ப சின்ன பையன். இளங்கலை பொருளாதார மாணவன்தான். எனக்கு இவ்வளவு தமிழுணர்வு இருக்கிறது என்றால் அதற்கு ஐயாதான் காரணம். என்னை ஊட்டி வளர்த்தார் என்பதில் மாற்று செய்தி இருக்க முடியாது.

 

அப்பொழுது கல்லூரி ஆண்டு மலருக்குக் கவிதை எழுதிக் கொடுங்கள், கட்டுரை எழுதிக் கொடுங்கள், உங்கள் ஆற்றலை வெளிப்படுத்துங்கள் என்று அவர் அறிவிக்கிறார். அப்பொழுது கவிதைகளை நானும் எழுதி கொடுத்தேன். எல்லாமே காதல் கவிதையாக இருக்கிறது என அதையெல்லாம் கிழித்து மேலே வீசினார். அப்பொழுது எனக்குக் கோபம் வந்து அண்ணன்களைக் கூட்டிக்கொண்டு அய்யா ஏன் இப்படிப் பண்ணுகிறார் என அவரிடம் கேட்போம். ''தம்பி நல்லாதானே கவிதை எழுதி இருக்கான் நீங்க ஏன் கிழித்துத் தூர வீசுகிறார்கள்'' எனக் கேட்க ''என்னடா உன் தம்பி எழுதிட்டான். காதலைதானே பாடுகிறான் மனிதனைப் பாடுவதற்கு ஒருத்தனும் இல்லையேடா. அவனாவது வரட்டும்டா... மனிதனைப் பாடச் சொல்லுடா'' என்றார். அன்னைக்கு தான் எனக்கு மானுடம் குறித்த சிந்தனையே வந்தது. அப்பேர்ப்பட்ட ஒரு பேரறிஞர் அவர். 

 

 '' I have lost the reason for my so much Tamil feeling '' - Seeman tearful tribute tho.paramasivan

 

அதன்பின் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைக்குப் போய்விட்டார். அங்கிருந்து அவர் பணி செய்துவந்தார். அவருக்கு சர்க்கரை நோய்  இருந்தது. அண்மையில் நான் சந்திக்கும்போது எனக்கு வயசு ஆயிடுச்சு என்று அவர் கூற, இதெல்லாம் ஒரு வயசா ஏன் இப்படிப் பேசுகிறீர்கள் என்று திட்டி விட்டேன். தற்பொழுது, ஒரு பெரிய அறிஞரை தமிழ்ப் பேரினத்தின் ஒரு அறிவு பெட்டகத்தை இழந்துவிட்டோம். நான் கட்சித் தொடங்கியபோது என்னை ஊக்கப்படுத்தி, அரசியல் வழிப்படுத்திய ஒரு பேராசான். அப்படிபட்ட ஒரு தமிழறிஞரை தமிழ்ச் சமூகம் இழந்துவிட்டது. 'அறியப்படாத தமிழகம்' என்பன உள்ளிட்ட எத்தனையோ புத்தகங்களை எழுதிய அப்படிப்பட்ட அறிஞருடைய மாணவன், அவரிடம் தமிழ்ப் படித்த மாணவன்  என்ற திமிர் எனக்கு உண்டு. அப்படிப்பட்ட ஒரு பேரறிஞரை நான் இழந்துவிட்டேன் என்பதால், ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு எனக் கண்ணீர் மல்க தனது இரங்கலைத் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.