Skip to main content

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Published on 22/03/2025 | Edited on 22/03/2025
Heavy rain warning for 10 districts

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 28 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலையில் இருந்தே தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. தமிழகத்தில் இன்று நாளையும் இயல்பை விட நான் இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழையும் பொழியவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்