Skip to main content

'கேட்டுச்சா? இதுதான் உங்க லட்சணமா?; '-பகீர் ஆடியோ வெளியிட்ட வருண்குமார் டிஐஜி  

Published on 10/04/2025 | Edited on 10/04/2025
nnn

அரியலூரில் எஸ்.பி அலுவலகத்திற்கு தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து புகாரளிக்க வந்த பெண்ணிடம் பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் தகாத முறையில் பேசிய நிலையில் அதை குறிப்பிட்டு டி.ஐ.ஜி.வருண்குமார் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அரியலூர் எஸ்.பி அலுவலகத்தில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் உதவி பெண் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சுமதி. அவரிடம்  பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் புகாரளிக்க வந்துள்ளார். அப்பொழுது அவர் அலைக்கழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட அந்த பெண் உதவி ஆய்வாளரிடம் பேசியுள்ளார். அதற்கு காவல் உதவி ஆய்வாளர் சுமதி தகாத வார்த்தையில் அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். இது தொடர்பான புகார் டிஐஜி வருணுக்கு சென்றது. இது குறித்து ஓபன் மைக்கில் சென்று காவலர்களை கண்டித்து பேசியுள்ளார். இதுதொடர்பாக வெளியாகி உள்ள ஆடியோவில் 

டிஐஜி வருண் குமார்: என்ன பர்பஸ்காக மகளிர் காவல் நிலையத்தை அரசாங்கம் உருவாக்குச்சி. எந்த எண்ணத்திற்காக உருவாக்கினார்கள். 

ஏடிஜிபி பெண் காவலர்: சார் பெண்கள் யாராவது பிரச்சனையில் இருந்தார்கள் என்றால் அதை தீர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது சார்.

டிஐஜி வருண்குமார்: அது அந்த ஆய்வாளருக்கு தெரிந்தால் நல்லது. உங்க ஸ்டேஷன்ல சுமதினு யாராவது இருக்காங்களா?

ஏடிஜிபி பெண் காவலர்:  சுமதி என்று ஒரு எஸ்எஸ்ஐ இருக்காங்க சார். கோர்ட் பார்த்துகிட்டு இருக்காங்க சார். 

டிஐஜி  வருண்குமார்: அந்த அம்மாவெல்லாம் உடனே சஸ்பெண்ட் பண்ணனும். ரேப் கேஸ் கம்ப்ளைன்ட்டோட ஒரு லேடி காவல் நிலையத்திற்கு வந்திருக்காங்க அதற்கு அப்பெண்ணிடம் தவறா பேசிருக்காங்க கேளுங்க' என (உதவி ஆய்வாளர் சுமதி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வீடியோவை ஓபன் மைக்கில் ஒலிக்கச் செய்தார்) ஹலோ நேத்திக்கு வர சொல்லி இருந்தீங்க. எனக்கு உடம்பு சரி இல்ல வர முடியல. இன்னைக்கு வரவா' என அப்பெண் கேட்க, 'நீ எல்லாம் திமிரு எடுத்து ஆடுறடி. நீ வந்தா என்ன வராட்டி என்ன .........' என தகாத வார்த்தையில் உதவி காவல் ஆய்வாளர் சுமதி பேசுகிறார்.

டிஐஜி வருண்குமார்: இது கேட்டுச்சா?

ஆண் காவலர்: கேட்டுச்சு ஐயா. தெளிவா கேட்டுச்சு. அஜாக்கிரதையா பேசினாங்க. பப்ளிக் கிட்ட ஒரு நல்ல முறையில் பேசவில்லை. 

டிஐஜி வருண்குமார்: அஜாக்கிரதையா பேசல அயோக்கியத்தனமா பேசுறாங்க. இந்த பாஷையில் தான் பெண்களிடம் பேசுகிறீர்களா? அதற்குத்தான் உருவாக்கினாங்களா?

ஏடிஜிபி பெண் காவலர்: சார்  அப்படி ஏதும் பேசவில்லை சார். இது தெரியாம பேசியிருப்பாங்க சார் சாரி.

டிஐஜி வருண்குமார்: வெட்கமா இல்ல உங்களுக்கு இன்ஸ்பெக்டர்ன்னு சொல்லிக் கொள்வதற்கு. தெரியாமல் பேசி இருப்பாங்கன்னு சொல்றீங்க. நீங்க தான் முதல் குற்றவாளி. ஆமா பேசினது தப்புதான்னு சொல்ல முடியல என்ன ஆய்வாளர் நீங்க. மைக்கில் பதில் சொல்றீங்களா அல்லது நேரில் நிக்க வைக்கவா?

ஏடிஜிபி பெண் காவலர்: பேசினது தப்புதான் சார். நான் வார்ன் பண்ணி விடுவேன் சார் உடனே.

டிஐஜி வருண்குமார்: அந்தக் காவல் நிலையத்தோட லட்சணம் தெரியுது. வரேன் ஒரு நாள் இன்ஸ்பெக்சன் அப்ப இருக்கு உங்களுக்கு. அந்த அம்மாவை உடனே அனுப்புங்க. ரேஞ்சர் ஆபீஸ்ல வந்து நிக்கட்டும். இங்கு பெட்டிஷனர் எல்லாம் ஹேண்டில் பண்ண வைக்கிறேன். அதன்பிறகு வேறு தொலைவு மாவட்டம் இராமநாதபுரம், கன்னியாகுமரி, தர்மபுரிக்கு போகணும் அந்த அம்மா. அந்த அம்மா எந்த டூட்டியில் இருந்தாலும் துரத்தி விடுங்க. ரேஞ்ச் ஆபீஸ் கொண்டு வாங்க, ஆர்டர் வரும். இந்த மாதிரி காவல் துறையில் அத்துமீறல்  பேச்சு இருந்தா இனி மைக்கில் வந்து அந்த ஆடியோ பிளே பண்ணப்படும்' மாவட்டத்திற்கு சொல்லிடுங்க'' என எச்சரித்தார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்