Skip to main content

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி பயணம் ரத்து!

Published on 19/04/2018 | Edited on 19/04/2018


சர்ச்சைகளுக்கு மத்தியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லி செல்வதாக இருந்த நிலையில் தற்போது இந்தப் பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகள் 4 பேரை தவறான பாதைக்கு அழைப்பது போன்ற தொலைபேசி பேச்சுகள் வெளியாகின. இதில் அந்த பேராசிரியை ஆளுநரை பற்றி குறிப்பிட்டது சர்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து நிர்மலாவை தாம் சந்தித்தது கூட இல்லை என ஆளுநர் விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லி செல்வதாக இருந்தது. அப்போது ஆளுநர் செய்தியாளர்களை சந்திப்பார் என கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்