Skip to main content

பிடிவாரண்டுக்கு பயந்து கோகுல்ராஜின் தோழி சுவாதி நீதிமன்றத்தில் திடீர் ஆஜர்!

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்த அவருடைய தோழி சுவாதிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 22) திடீரென்று நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

 

 

 Gokulraj's girlfriend  Sudden appearance in court

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (23). பி.இ. பட்டதாரி. இவர் 23.6.2015ம் தேதி, நாமக்கல் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில்தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கொண்ட கும்பல்தான் அவரை கொலை செய்ததாக, திருச்செங்கோடு போலீசார் அவர்களை கைது செய்தனர்.

 

 

 

 

இந்த வழக்கில், கோகுல்ராஜின் நெருங்கிய தோழியான நாமக்கல் பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதியை, அரசுத்தரப்பில் முக்கிய சாட்சியாக சிபிசிஐடி போலீசார் சேர்த்து இருந்தனர். ஆனால் அவர் பிறழ் சாட்சியாக மாறினார். இதையடுத்து, பிறழ் சாட்சியம் அளித்த சுவாதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிபிசிஐடி போலீசார், நாமக்கல் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில், 1.10.2018ம் தேதி வழக்கு தொடர்ந்தனர்.

 

 

 

 

இந்த வழக்கு முதன்முதலாக கடந்த பிப்ரவரி 11, 2019ம் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பப்பட்டும் அன்றைய தினம் சுவாதி ஆஜராகவில்லை. அதன்பிறகு, மீண்டும் கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்தபோதும் சுவாதி நீதிமன்றத்திற்கு வரவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தும், மார்ச் 12ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் முதலாவது நீதித்துறை நடுவர் வடிவேல் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

 

 

 

இந்நிலையில், நாமக்கல் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நீதிமன்ற நடுவர் ஜெயந்தி முன்னிலையில், பிப்ரவரி 22, 2019ம் தேதி திடீரென்று சுவாதி ஆஜரானார். கடந்த முறை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாதது குறித்து விளக்கம் அளித்தார். இதையடுத்து அவர் மீதான பிடிவாரண்டை ரத்து செய்து, வரும் மார்ச் 12ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.