Skip to main content

கஜா புயலினால் மக்காச்சோளம் பாதிப்பு - விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய இ.பெரியசாமி!

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
p

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர், ரெட்டியார்சத்திரம், ஆத்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் மக்காச்சோள பயிர்களை தொடர்ந்து விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். செம்பட்டி அருகே உள்ள எஸ்.பாறைப்பட்டி, மல்லையாபுரம், அக்கரைப்பட்டி, ஆத்தூர், கலிக்கம்பட்டி மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மக்கச்சோள பயிர்களை பயிரிட்டு இருந்தனர். 

 

கஜா புயலினால் ஆத்தூர் ஒன்றியம், எஸ்.பாறைப்பட்டி மற்றும் அக்கரைப்பட்டி, மல்லையாபுரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் நாசமடைந்தன. செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டி, மல்லையாபுரம், அக்கரைப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட விளை நிலங்களை பார்வையிட்ட முன்னாள் அமைச்சரும், ஆத்தூர் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினரும், தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளருமான இ.பெரியசாமி வருடத்திற்கு ஒருமுறை தான் மானாவாரியாக இப்பகுதியில் விவசாயிகள் மக்காச்சோளம், பருத்திகளை பயிரிடுகின்றனர். வருடத்திற்கு ஒருமுறை விளையக்கூடிய பயிரை வைத்துதான் அவர்களின் வாழ்வாதாரம் உள்ளது. ஒரு ஏக்கருக்கு 20ஆயிரம் முதல்  30ஆயிரம் வரை வட்டிக்கு கடன் வாங்கி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். 

 

p

 

கஜா புயலினால் அறுவடைக்கு தயாராக இருந்து மக்காச்சோள பயிர்கள் நாசமடைந்துள்ளன. அவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குறிப்பாக ஒரு ஏக்கருக்கு 30ஆயிரம் முதல் 50ஆயிரம் வரை நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றார். ஒவ்வொரு முறையும் புயல் மற்றும் மழை காலங்களில் ஆத்தூர் தொகுதிகளில் பயிர்கள் சேதமடைந்தால் வருவாய்துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பதும் இல்லை, உரிய நிவாரணமும் கொடுப்பதும் இல்லை. இம்முறை அதிகாரிகள் முறையாக கணக்கெடுத்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுக்காவிட்டால் விவசாயிகளை ஒன்றுதிரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார். 

 

தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளருடன் ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பாறைப்பட்டி சி.ராமன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கும்மம்பட்டி விவேகானந்தன், ஒன்றிய துணைச் செயலாளர் மல்லையாபுரம் சக்திவேல், ஒன்றிய அவைத்தலைவர் காணிக்கைசாமி, பாறைப்பட்டி ஊராட்சி கழக செயலாளர் இ.எம்.வாஞ்சிநாதன் மற்றும் விவசாய அணி துணை அமைப்பாளர் வி.ராஜா, ஆர்.நடராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வட்டாரத் தலைவர் எம்.எஸ்.வி.தெய்வம் உட்பட கட்சி பொறுப்பாளர்களும், விவசாயிகளும் பலர் கலந்து கொண்டனர்!

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு ஓரளவுக்கு நடந்து வருகிறது. காலை ஏழு மணிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில்  தனது வாக்கை பதிவு செய்தார். அதுபோல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் ராமலிங்கம்பட்டியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவுடன் உடன் திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி  மத்தியில் ஆட்சி அமைக்கும். வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமாக உள்ளது. 150க்கும் குறைவான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். எப்பொழுதும்  போலவே  குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளேன்” என்று கூறினார்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.