Skip to main content

ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் இல்லை; பரிதாபமாக பலியான விவசாயி

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

farmer passes away in puthukottai

 

தென்னை, பனை மரம் உள்ளிட்ட மரங்களில் பெரிய பெரிய கூடுகள் கட்டியுள்ள கதண்டுகள் என்னும் விஷ வண்டுகள் கடித்து பலர் பலியாகிவரும் சம்பவம் தொடர்கிறது.

 

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு தெற்குப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பு வழியாகச் சென்றவர்கள் பலரையும் கால்நடைகளையும் நேற்று முன்தினம் மாலை கதண்டு விரட்டி விரட்டி கடித்துள்ளது. இதில் காயமடைந்த பலரும் முதலுதவி சிகிச்சைக்காக வடகாடு 24 மணி நேர அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் சென்றால் அங்கே இரவு பணிக்கு மருத்துவர் இல்லை. அதனால் அங்கிருந்த செவிலியர் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் சீட்டு எழுதிக் கொடுத்து அனுப்பியுள்ளார். 

 

சிலர் அரசு மருத்துமனைகளுக்கும் பலர் தனியார் மருத்துவமனைகளுக்கும் 108 ஆம்புலன்ஸ் உட்பட கிடைத்த வாகனங்களில் ஏறி சிகிச்சைக்காக சென்றனர். இதில் 2 நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்த 58 வயது கமருதீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி அபிதா பேகம் (50), அருணாசலம் (60), ராதா (33) உட்பட மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விஷ வண்டுகள் கடித்து விவசாயி கமருதீன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்