Skip to main content

வீழ்ந்த தேங்காய் விலை... தேங்காயை உடைத்து விவசாயிகள் போராட்டம்!

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

Falling coconut prices ... Farmers struggle to break coconuts!

 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அய்யம்பாளையத்தில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் தேங்காய் விலை வீழ்ச்சியைக் கண்டித்தும், விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் முன் வர வலியுறுத்தியும் சாலையில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.

 

இதில் மாவட்ட விவசாயச் சங்கத் தலைவர் பெருமாள் தலைமையில் ஏராளமான தென்னை விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர் அய்யம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் தொடங்கி சித்தரேவு பிரிவு வரையிலான சாலையில் வழி நெடுகிலும் தேங்காய்களை உடைத்த வண்ணம் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 140 விலை நிர்ணயம் செய்ய வேண்டும், பச்சை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 50 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என  விவசாயிகள் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தின் போது சாலை நெடுகிலும் உடைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தேங்காய்களை  அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எடுத்துச் சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.