Skip to main content

ஆறு மணி நேரத்திற்கு பின்னரே அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள்!

Published on 22/05/2019 | Edited on 22/05/2019

 


 542 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தொடங்கி, கடந்த 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது

 

er


 நாளை காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


வழக்கமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் மாலைக்குள் முடிவுகள் வெளியாகி விடும். இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாக்கு ஒப்புகைச்சீட்டுகளும் எண்ணப்படுவதால் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாவது 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் தேர்தல் முடிவுகள் நாளை மாலைக்கு பின்னரே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

சார்ந்த செய்திகள்