Skip to main content

‘ திமுக எடுக்கும் நடவடிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கட்டுபடும்’- திருமாவளவன் அறிவிப்பு

Published on 31/10/2018 | Edited on 31/10/2018
vck

 

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் டிசம்பர் 10ஆம் தேதி திருச்சியில் தேசம் காப்போம் மாநாடு நடைபெறுகிறது. அதனையொட்டி சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயற்க்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் அறவாழி தலைமை வகித்தார்.

 
 இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசுகையில், சனாதனத்தையும் பயங்கரவாத சக்திகளை எதிர்த்து திருச்சியில் தேசம் காப்போம் மாநாடு நடைபெறுகிறது. இதில் மதசார்பற்ற அனைத்து கட்சியின்  தேசிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.  தேசிய கட்சிகளான காங்கிரசும், இடதுசாரி கட்சிகள் தேசம் காப்போம் மாநாடு நடத்தியிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் பெருபான்மையாக உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசம் காப்போம் மாநாடு நடத்துகிறது. மற்ற கட்சிகள் தேசம் காப்போம் மாநாடு நடத்துவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு நடத்துவதற்கு வித்தியாசம் உள்ளது. சனாதனத்தை எதிர்த்து தொலைநோக்கு சிந்தனையுடன் நடத்தப்படுகிற இந்த மாநாடு இந்திய தேசத்தையே திரும்பி பார்க்கும் வகையில் அமையும்.
 

 பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் இணைந்து மாநாட்டில் கலந்து கொள்கிறது. மோடி அரசு 182 மீட்டர் உயரத்தில் மிகப் பெரிய உயரத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைத்துள்ளது.  இது காந்தியையும் அம்பேத்கரையும் விட உயர்ந்தவராக காண்பிப்பதற்காகவே வைக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் ஒரு வேலை சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் ரூ3600 கோடி செலவில் சிலை வைத்ததற்கு கண்டனம் தெரிவித்தார். வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக எடுக்கும் நடவடிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கட்டுபடும் என்றார்.

 

அதேபோல் நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுவதாக தெரிவித்தார். இவருடன் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார். கடலூர் தொகுதி பாரளுமன்ற செயலாளர் தாமரைசெல்வன், சிதம்பரம் தொகுதி செயலாளர் செல்லப்பன் செய்திதொடர்பாளர் திருவரசு விவசாய அணிதலைவர் பசுமைவளவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பானை சின்னம்; வி.சி.க. மேல்முறையீடு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
NN

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை வி.சி.க. நாடியது.

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. நேற்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்றத் தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த பானை சின்னம் வேண்டும் என விசிக  தேர்தல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த தேர்தலில் 1.16 சதவிகித வாக்குகளைத் தமிழகத்தில் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.