Skip to main content

ஜெ. நினைவிட கட்டுமான பணிகளை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி(படங்கள்) 

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

 


ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணியை முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். முன்னதாக, ஜெயலலிதா நினைவிடம் சென்ற பழனிசாமி அங்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

e

 முதலமைச்சர் பழனிசாமி அங்கு நடைபெற்று வரும் நினைவிட  கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்,   ‘’ஜெயலலிதாவின் புகழுக்கு புகழ் சேர்க்கும் விதமாக நினைவு மண்டபம் அமைகிறது. இன்னும் 5 மாத காலத்தில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் நிறைவுபெற்று, பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படும். சுமார் 60 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது’’என்று தெரிவித்தார்.

eeee

 

சார்ந்த செய்திகள்