Skip to main content

குடிநீர் தேவைக்கு தண்ணீர் தரமாட்டோம் என்பது தான் மனிதாபிமானமா..? - துரைமுருகன் கோபம்!

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

kl

 

கர்நாடக அமைச்சரின் பேச்சுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று காலை நடைபெற்ற தருமபுரி மாவட்ட நலத்திட்ட விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் " ஓகேனக்கல் கூட்டு குடிநீர் 2" திட்டம் துவங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு கர்நாடக நீர்வள அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்து இன்று கருத்து தெரிவித்திருந்தார். அதில் நாங்கள் இந்த திட்டத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம். நிச்சயம் இந்த திட்டத்திற்கு எங்களின் எதிர்ப்பை பதிவு செய்வோம் என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, " கர்நாடக அமைச்சரின் பேச்சு பொறுப்பில்லாத ஒன்று, நிச்சயம் இதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குடிநீர் தேவைக்கு தண்ணீர் தரமாட்டோம் என்பது எவ்வித மனிதாபிமானம். காவிரியில் இருந்து 11 டிம்எசி தண்ணீரை குடிநீருக்கு எடுத்துக்கொள்ள காவிரி நதிநீர் அணையம் அனுமதி வழங்கியுள்ளது. நாட்டின் நீர்வளக் கொள்கையின் படி குடிநீர் தேவைக்குத்தான் முதலிடம் தரப்பட்டுள்ளது. எனவே இரண்டாவது ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மீண்டும் மிசா வரும்” - அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Minister Duraimurugan warns that misa will come again

வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் அறிவித்ததையடுத்து இன்று குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே திறக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.

அப்போது, “பிரதமர் மோடி வாரிசு அரசியல் பற்றி பேசுகிறார். ஆனால் நாங்கள் தியாகம் செய்ததைபோல் அவர்கள் செய்துள்ளார்களா? நாங்கள் தியாகத்திலேயே வளர்ந்தவர்கள். மிசாவில் நான் கைதான போது எனது காலரை எனது ஒரு வயது மகன் கதிர் ஆனந்த் பிடித்துக் கொண்டான். அந்தப் பிஞ்சு கையை காவல்துறையினர் தூக்கி எறிந்து என்னை கைது செய்து சென்றார்கள். அதற்குப் பிறகு மூன்று மாத காலம் அவர்களை பார்க்க முடியவில்லை. மூன்று மாதம் கழித்து எனது மனைவி எனது ஒரு வயது மகன் கதிரானந்தை சிறைக்கு அழைத்து வந்தார்.

அவனைப் பார்த்தபோது கட்டித் தழுவி கொள்ளலாம் என ஏங்கினேன். கட்டி தழுவ முயற்சித்த போது அங்கு இருந்த காவலர் ஒருவர் நீ குற்றவாளி குழந்தையை தொடக்கூடாது. நீ அவனை ஏதாவது (கொலை) செய்து விடுவாய் என கூறி தடுத்துவிட்டார். நானா எனது மகனை ஏதாவது செய்து விடுவேன் என அப்போதே கண் கலங்கினேன். எனது மகன் கையை நீட்டி அப்பா... அப்பா... என கூறினான்.

அதற்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்து ஒரு வருட காலம் எனது மகனை நான் தொட்டதே இல்லை. அந்த அளவுக்கு வலியை அனுபவித்தவர்கள் நாங்கள்” என கண் கலங்கி நா தழுதழுத்த குரலில் பேசினார்.

எங்களைப் பார்த்து வாரிசு அரசியலென மோடி பேசுகிறார். மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கி இந்தியா போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் ஜனநாயகக் குரல் வலையை நெரிக்கும் காரியத்தை மத்திய அரசு செய்கிறார்கள். ஆக இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது போல் ஒரே கட்சியை கொண்டுவர முயற்சிக்கிறார்கள். வடகொரியாவில் நடப்பது போல் ஒரு ஆட்சியை இங்கு நடத்த வேண்டும் என பாரதிய ஜனதாவினர் கருதுகிறார்கள். நீங்கள் போடுகிற ஓட்டு ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக போடுகிற ஓட்டு. இல்லாவிட்டால் மீண்டும் ஒரு மிசா வரும் என பேசினார்.

Next Story

“திமுக வேட்பாளரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்” - அமைச்சர் துரைமுருகன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
planning to arrest the DMK candidate says Minister Duraimurugan

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடியாத்தம் நகரில் இன்று திமுக சார்பில் தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது, தேர்தல் நேரத்தில் ஐடி சோதனை உள்ளிட்ட பலவற்றையும் செய்வார்கள். எங்கள் வேட்பாளர் ஒருவரை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளதாக எனக்கு தகவல் வந்துள்ளது. கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் திமுக அஞ்சவில்லை என்றார்.