Skip to main content

சேர்மன் பதவிக்கான மோதல் - ஆளும்கட்சி பிரமுகர்களுக்குள் அடிதடி.. காவல்துறை தடியடி..! 

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

Conflict for the post of chairman - beatings within ruling party figures .. Police beatings ..!

 

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதில் திமுக 85 சதவீத வெற்றியும், அதிமுக 15 சதவீத வெற்றியும் பெற்றுள்ளன. வெற்றி பெற்றவர்கள் அக்டோபர் 20ஆம் தேதி வார்டு உறுப்பினர்களாக, ஊராட்சி மன்ற தலைவர்களாக, ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்தில் பதவி ஏற்றுக்கொண்டு வெளியே வந்த கவுன்சிலர்களை ஆளும்கட்சியைச் சேர்ந்த இரண்டு குழுக்கள் இடையே கைகலப்பாகி, அது தள்ளுமுள்ளுவாகி, காவல்துறை தடியடி நடத்தி விரட்டியடித்துள்ளது.

 

ஆலங்காயம் ஒன்றியம் 18 வார்டுகளைக் கொண்டது, நடந்து முடிந்த தேர்தலில் 18 இடங்களில் திமுக 11 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும், பாமக 2 இடங்களிலும், சுயேச்சை 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

 

ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு தேவையான கவுன்சிலர்கள் திமுகவில் உள்ளனர். இதனால் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்வு திமுகவுக்கு சாதகமாகவே உள்ளது. இந்நிலையில் தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளது.

 

திருப்பத்தூர் மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் எம்.எல்.ஏ தனது மருமகள் காயத்ரி பிரபாகரனை சேர்மனாக்க முடிவு செய்தார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர்ஆனந்தின் ஆதரவாளர் பாரி என்பவர் தனது மனைவியான கவுன்சிலர் சங்கீதாவை சேர்மனாக்க வேண்டுமென ஆதரவு தேடினார். திமுக கவுன்சிலர்கள், அதிமுக கவுன்சிலர்கள் இருவர், பாமக கவுன்சிலர் இருவர், சுயேச்சை ஒருவர் என 14 பேரை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பாரி வெளிமாவட்டம் ஒன்றில் தங்கவைத்து பாதுகாத்துள்ளார்.

 

அக்டோபர் 20 ஆம் தேதி பதவியேற்பு நிகழ்வுக்காக ஆலங்காயம் ஒன்றியக்குழு அலுவலகத்துக்கு அழைத்து வந்துள்ளார். கவுன்சிலர்களாக பதவியேற்றுக்கொண்டு கவுன்சிலர்கள் வெளியே வரும்போது, அதில் திமுக கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுக்க மா.செ. தேவராஜ் மச்சானும், ஆலங்காயம் ஒ.செவுமான அசோகன், கார்களோடு சென்றவர், தன் ஆட்களை வைத்து கவுன்சிலர்களை இழுத்துள்ளார். அதனை பாரி ஆட்கள் விடாமல் தங்கள் பக்கம் இழுத்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு வந்திருந்த காவல்துறை அதிகாரிகள் இருதரப்பையும் விலக்கிவிட முயல, அது முடியாமல் போய் உள்ளது. இறுதியில் காவல்துறை தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் கவுன்சிலர்கள் கார்களில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது இருதரப்பும்.

 

திமுக பாரிக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்கள், பாமக கவுன்சிலர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பது பல தரப்பிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக தரப்பில் விசாரித்தபோது, திமுக மா.செ தேவராஜ் மீதுள்ள அரசியல் ரீதியிலான பகையில் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் சேர்மனாகக் கூடாதென முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத்குமார், சிட்டிங் எம்.எல்.ஏ. சதிஷ்குமார் தரப்பு தீவிரமாக வேலை செய்கிறது. அதனால் திமுகவில் சேர்மன் போட்டி ஏற்பட வெளிப்படையாக அந்த போட்டி குரூப்புக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.