Skip to main content

அதிமுகவையும், இரட்டை இலையையும் கைப்பற்றமாட்டோம்-திவாகரன் பேச்சு

Published on 25/02/2019 | Edited on 25/02/2019

மன்னார்குடி தேரடியில் அண்ணா திராவிடர் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் மற்றும் ஜெ. பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய திவாகரன்.. 

 

thivakran speech

 

ஜெ.வை அதிமுகவுக்குள் கொண்டு வந்து முதலமைச்சர் ஆக்குவதற்குள் எவ்வளவோ அடிகள் வாங்கினோம்.  ஆனால் அதன் பிறகு வியாபாரிகள் வந்து நுழைந்து கொண்டனர். எங்கள் குடும்பத்திலும் வியாபாரிகள் நுழைந்தார்கள். ஜெ.வுக்கு பாதுகாப்பு வளையம் அமைத்தோம் அதன் பிறகே ராஜிவ்காந்திக்கு அமைத்தார்கள். 

 

பெரிய அம்மா ஜெ மறைந்தபோது அந்த பதவிக்கு அண்ணன் ஒ.பி.எஸ்ஸை  நியமித்தோம். ஆனால் அவரை மிரட்டி கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். பிறகு எடப்பாடியை முதல்வராக்க கூவத்தூரில் 122 எம்.எல்.ஏக்களை பாதுகாத்தோம்.

 

இப்படி எல்லாம் நடக்கும் போது என் முன்னாள் சகோதரிக்கு தீர்ப்பு வர ஒரு வாரம் இருக்கும் போது அந்த இடத்துக்கு ஆசைப்படலாமா?. இப்ப சிறையில் இருக்கிறார். ஒரு போதும  அதிமுக, இரட்டை இலையை கைப்பற்றுவோம் என்று சொல்லமாட்டோம் என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்