Skip to main content

'விராலிமலை சுப்பிரமணியசாமி கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்துக' - தெய்விகத் தமிழ்ப் பேரவை மனு!

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

 'Viralimalai Subramaniasamy Temple festival in Tamil' - Divine Tamil petition!

 

புதுக்கோட்டை மாவட்டம் - விராலிமலையிலுள்ள சுப்பிரமணியசாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டுமென தெய்விகத் தமிழ்ப் பேரவை சார்பில், நேற்று (17.02.2020) அரசுக்குக் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

 

வரும் 25.02.2021 அன்று விராலிமலையிலுள்ள சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. அதில், யாக சாலை, கோபுரக் கலசம், கருவறை ஆகிய மூன்று நிலைகளிலும் தமிழ் ஓதுவார்களைக் கொண்டு தமிழில் மந்திரங்கள் ஓதப்பட வேண்டுமென வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், தஞ்சாவூர் அலுவலகத்திலுள்ள உதவி ஆணையர், புதுக்கோட்டை செயல் அலுவலர் ஆகியோரிடம் நேரில் சென்று தெய்விகத் தமிழ்ப் பேரவை சார்பில் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன.

 

 'Viralimalai Subramaniasamy Temple festival in Tamil' - Divine Tamil petition!

 

தெய்விகத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் வே.பூ.இராமராசு, பொறியாளர் ச.முத்துக்குமாரசாமி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழ. இராசேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் மூ.த.கவித்துவன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் நா.இராசா ரகுநாதன், இரெ.ஆனந்தன் (தமிழ்த்தேசியப் பேரியக்கம்) ஆகியோர் இம்மனுக்களை நேரில் சென்று வழங்கினர்.

 

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில் குடமுழுக்குகளிலும் தமிழ் மொழி பயன்படுத்தப்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு அதை முழுமையாகப் பின்பற்றி விராலிமலை சுப்பிரமணிய சாமி திருக்கோயிலிலும் தமிழில் திருக்குடமுழுக்கு நடத்த ஆணையிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.