Skip to main content

சைனீஸ் கந்துவட்டி... 'உஷார்' தெரிவிக்கும் மத்திய குற்றப்பிரிவு!

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

Chinese interest ...  reports Central Crime Division!

 

இந்தியாவில், 300 கோடி ரூபாய் அளவிலான மோசடியை நடத்தியுள்ளது சீன கந்துவட்டிக் கும்பல் ஒன்று. கந்துவட்டி மோசடியில் கிடைத்த பணத்தை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு வியாபாரத் தளங்களில் முதலீடு செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Chinese interest ...  reports Central Crime Division!

 

பெங்களூரில் கால் சென்டர் வைத்து, நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் கடன் தருவதாகக் கூறி கந்துவட்டித் தொழிலில் ஈடுபட்ட சீனாவைச் சேர்ந்த ஜியோ யமஹோ, ஹுயுவாலுன், பெங்களூருவைச் சேர்ந்த ப்ரோமோத், பவன் உள்ளிட்ட பலரை கடந்த வாரம் சென்னை போலீசார் கைதுசெய்தனர். ஆன்லைனில் கடன் தருவதாகச் சொல்லி விளம்பரப்படுத்தும் செயலிகளை உருவாக்கி கோடிக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதலீடாகக் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

Chinese interest ...  reports Central Crime Division!

 

சீனாவைச் சேர்ந்த மோசடிக் கும்பல்தான் அத்தனைக்கும் தலைமை. இதில், கைது செய்யப்பட்ட அனைவரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சீனர்கள். அவர்கள் இருவரும் போலியாக நிதி நிறுவனம் தொடங்கி அதற்காக 1,600 சிம் கார்டுகளைப் பெற்றுள்ளனர். அதேபோல் கைது செய்யப்பட்ட இரு சீனர்களும் பாஸ்போர்ட் காலாவதியான போதிலும் இந்தியாவில் சட்டத்தை மீறி தங்கியிருந்திருப்பது தெரியவந்துள்ளது. இவர்களை இயக்கும் தலைவன் சிங்கப்பூரிலுள்ள ஹாங் என்பதும் தெரியவந்துள்ளது.

 

இந்தியாவில் வேறு எங்கெல்லாம் இதுபோன்ற மோசடிகள் நடந்துள்ளது. இவர்களால் என்னென்ன மோசடிகள் அரங்கேற்றப்பட்டுள்ளது என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடிக்கணக்கில் பணம் செலவுசெய்து கால் சென்டர்களை உருவாக்கி, இதுவரை 300 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டிருப்பதும், இதில் வரும் லாபத் தொகையை அப்படியே ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம் போன்றவற்றில் சட்ட விரோதமாகக் கைதாகியுள்ள சீனர்கள் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் ஆன்லைனில் கடன்பெறுவது அல்லது மொபைல் ஆப்கள் மூலம் கடன்பெறும் பொழுது உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர் மத்திய குற்றப்பிரிவு போலீசார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே கட்சி நிர்வாகி வீட்டின் கழிவறையில் ரூ.1லட்சம் பறிமுதல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
IJK party executive house toilet Rs 1 lakh seized

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் ரூபாய் ஒரு லட்சம் பணம் மற்றும் துண்டறிக்கைகளை  தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (17.4.2024) இரவு பறிமுதல் செய்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.இந்நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சூசையப்பர் மகன் வினோத் சந்திரன்  ஐஜேகே கட்சியின் கிளைச் செயலாளராக உள்ளார். இவர் அந்தப் பகுதி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து லால்குடி வட்டாட்சியர் உத்தரவின் பெயரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செழியன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில், வினோத் சந்திரன் வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், பணம் விநியோகிக்கக்கூடிய பெயர் பட்டியல் மற்றும் டாக்டர் பாரிவேந்தரின் பாராளுமன்றத் தொகுதி பணிகள் என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட 500 புத்தகங்கள் 100 துண்டு பிரசுரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்தும் வினோத் சந்திரனிடம் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தன்னுடையது இல்லை என கூறியதை அடுத்து பறிமுதல் செய்த பணத்தினை பறக்கும் படை அலுவலர் செழியன் லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனிடம் ஒப்படைத்தார். அவர் பணத்தை லால்குடி கருவூலத்தில் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தார்.

Next Story

திருமணமான பெண்ணுக்கு கத்தி குத்து; முன்னாள் காதலன் வெறிச்செயல்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 married woman has been stabbed by her ex-boyfriend

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார்.

இந்துமதி - அஜித்குமார் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர ‌ இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர்  ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் இந்துமதி. இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித்குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி  அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியதாக தெரிகிறது.

 married woman has been stabbed by her ex-boyfriend

அதனைத் தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார்  திருப்பத்தூர்   பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது இந்துமதி அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். அங்கே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும்  உடம்பின் பல்வேறு பகுதிகளில் குத்தியும்,வெட்டியும் விட்டு  தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக  சரணடைந்தார்.