Skip to main content

“இது மக்களுக்கான அரசு என்பதை நிரூபித்துவருகிறார் முதல்வர்” - அமைச்சர் சி.வி. கணேசன் பேட்டி!!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

"The Chief Minister is proving that this is a government for the people" - Minister CV Ganesan

 

தமிழ்நாடு அரசு கரோனா நோய் பரவலைத் தடுப்பதற்காகவும், கட்டுப்படுத்துவதற்காகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்திவருகிறார்கள். இந்த நடவடிக்கை தொடர்பாக திட்டக்குடி தொகுதி எம்.எல்.ஏவும் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சி.வி. கணேசன், தினசரி கரோனா தடுப்பு நடவடிக்கைள் பற்றி பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.

 

மருத்துவ சிகிச்சை சம்மந்தமாக பல்வேறு மருத்துவமனைகளுக்கும் சென்று ஆய்வுசெய்து மக்களுக்கான சிகிச்சைகள் கிடைப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறையினருக்கும், மருத்துவர்களுக்கும் எடுத்துக் கூறிவருகிறார். அதோடு திட்டக்குடி தொகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டதும் சிகிச்சை பெறுவதற்காக கடலூர், சிதம்பரம் போன்ற மருத்துவமனைகளுக்கு சுமார் 100 கிலோ மீட்டர் கடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் பெரம்பலூர், அரியலூர் போன்ற ஊர்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு  சுமார் 80 கிலோ மீட்டர் தூரம் செல்லும் நிலை உள்ளது.

 

"The Chief Minister is proving that this is a government for the people" - Minister CV Ganesan

 

இதனால் நோய்வாய்ப்பட்டவர்கள் மிகுந்த சிரமம் அடைந்துவருகிறார்கள். மேலும்  திட்டக்குடி, திருவள்ளூர் அரசு கலைக்கல்லூரியில் நோய் தடுப்பு தனிமைப்படுத்தும் முகாம் செயல்படுகிறது. இப்பகுதியில் நோய் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கும் அளவிற்குப் பெரிய மருத்துவமனைகள் இல்லை. இதனால் மக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாவதை அறிந்த அமைச்சர், உடனடியாக திட்டக்குடி அரசு மருத்துவமனை மேல் தளத்தில் சுமார் 40 லட்சம் செலவில் புனரமைப்பு செய்து, கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகள் செய்வதற்கான ஏற்பாடுகளை மிக வேகமாக செய்துள்ளார்.

 

இதுகுறித்து அமைச்சர் நம்மிடம் கூறியதாவது, “இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் உத்தரவின்பேரில், திட்டக்குடி அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்யும் பணிகள் மிக வேகமாக நடைபெற்றுவருகிறது. அது முடிந்தவுடன் அதன் மேல் தளத்தில் ஆக்சிஜன் உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய படுக்கைகள் தயார் செய்யப்படும். இன்னும் இரண்டு தினங்களுக்குள் தற்போது கரோனா சிகிச்சை முகாமாக செயல்பட்டுவரும் திட்டக்குடி, திருவள்ளூர் அரசு கலைக்கல்லூரியில் 150 படுக்கைகள் அதற்கான ஆக்சிஜன் உட்பட அனைத்து வசதிகளும் தயார் செய்யும் பணி மிக துரிதமாக நடைபெற்றுவருகிறது.

 

"The Chief Minister is proving that this is a government for the people" - Minister CV Ganesan

 

இதன் மூலம் இப்பகுதியில் நோய் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் உடனடியாக இங்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளித்து காப்பாற்றப்படுவார்கள். இனிமேல் நீண்டதூரம் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியது இல்லை. நோய் பரவல் தற்போது குறைந்துவருகிறது, இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையை விரிவாக்கம் செய்தல், கூடுதல் படுக்கை வசதிகள் செய்வதற்கான பணிகளில் கவனம் செலுத்தப்படுகிறது. அரசு அதிகாரிகளும், மருத்துவர்களும், சுகாதாரத்துறையினரும் சிறப்பாக செயல்படுகிறார்கள். திட்டக்குடி, வேப்பூர், விருத்தாசலம் ஆகிய மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் மிக வேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள சில தனியார் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சை அளிப்பதற்காக முன்வந்துள்ளன. எனவே மக்கள் நோய் அறிகுறி இருந்தால் உடனடியாக எந்தவித தயக்கமுமின்றி, பயமுமின்றி மருத்துவமனைக்கு வரலாம்.

 

மேலும் வர முடியாதவர்கள் 108  ஆம்புலன்ஸ் மூலம் தொடர்புகொண்டாலும் உடனடியாக அவர்களை அழைத்துச் சென்று சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மக்கள் நலனில் தமிழ்நாடு முதல்வர் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டுவருகிறார். இது மக்களுக்கான அரசு என்பதை நிரூபித்துவருகிறார் தமிழ்நாடு முதல்வர்” என்கிறார் அமைச்சர் கணேசன். இந்த ஆய்வின்போது விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார், திட்டக்குடி வட்டாட்சியர்கள் தமிழ்ச்செல்வி, ரவிச்சந்திரன், திட்டக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தேவேந்திரன், மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் விவேக் ஆகியோர் உடன் இருந்தனர். திட்டக்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.