Skip to main content

சுவாமி சகஜானந்தா மணிமண்டபத்தை புறக்கணித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!!

Published on 29/08/2018 | Edited on 29/08/2018
edapadi

 

 

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாகை மாவட்டம் திருக்கடையூர் நடைபெறும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரின் மகன் திருமணத்திற்கு செல்வதற்காக கடலூர் மாவட்டம் சிதம்பரம் வழியாக புதன்கிழமை மாலை சென்றார்.  இவரை கடலூரில் அமைச்சர் சம்பத், மாவட்ட ஆட்சியர் அன்பு செழியன் ஆகியோர் வரவேற்று பூங்கொத்து அளித்தனர். இதனை தொடர்ந்து சிதம்பரம் வண்டி கேட்டு பகுதியில் கடலூர் எம்பி அருண்மொழித்தேவன் சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன்கா, கட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ முருகுமாறன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

 

இதனைத் தொடர்ந்து சிதம்பரம் பொதுப்பணித்துறை  விருந்தினர் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் தமிழகத்தில் 40 ஆயிரம் ஏரிகள் உள்ளது. மழை நீரை சேமிக்க குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

 

 

 

கேரளாவில் அதிக மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில் அதுபோன்ற நிலை ஏற்படாது, அதிக மழை பெய்யும் போது வெள்ளம் ஏற்படுவது இயற்கை., தமிழகத்தில் அதை சமாளிக்க அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. குடிமராமத்து பணிகள் மூலம் தமிழகத்தில் பெரும்பாலான ஆறு, ஏரி குளங்கள், தூர் வாரப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 318 கோடி மதிப்பீட்டில் 1500 ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதனால் தண்ணீரை அதிக அளவில் சேமித்துவைக்கப்படுகிறது. கடைமடைவரை தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தேவைக்கு ஏற்றவாறு தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் இந்தத் திட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள்.  பல ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக விவசாயிகளுக்கான எந்த பிரச்சினையும் சரிசெய்யவில்லை.  உச்ச நீதிமன்றம் மூலம் அதிமுக அரசு விவசாயிகளின் உரிமைகளை மீட்டு தந்துள்ளது என்றும் கூறினார்.

 

 

 

முன்னதாக தமிழக முதலமைச்சர் தங்கும் பொதுப்பணித்துறை விடுதிக்கு 100 மீட்டர் தூரத்தில் அரசு பெண்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது முன்னறிவிப்பின்றி விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அதேபோல் சிதம்பரம்- சீர்காழி சாலையில் அமைந்துள்ள சுவாமி சகஜானந்தர் மணிமண்டபத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தருகிறார் என்று அரசு சார்பில் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் காட்டுமன்னார்கோயில் தொகுதி எம்எல்ஏ முருகுமாறன் ஆகியோர் மணிமண்டப ஒருங்கிணைப்பு குழு மற்றும் நந்தனார் கல்விக்கழக நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்கள். இதனை தொடர்ந்து மணிமண்டபத்தில் முதல்வரை வரவேற்க சால்வை மற்றும் மாலைகளுடன் மணிமண்டப ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சிகளை சார்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்தனர். ஆனால் முதல்வரோ மணிமண்டப வழியாக சென்றும் மணிமண்டபத்திற்கு வரவில்லை. இதனால் மணிமண்டபத்தில் கூடியிருந்த நிர்வாகிகள் முதல்வர் மீது விரக்தி அடைந்து அதே இடத்தில் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இருந்தனர். பின்னர் அதிமுக மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் உள்ளிட்டவர்கள் சமாதனம் செய்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.