Skip to main content

சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்!

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

 

தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, சென்னை பல்கலைக் கழக மாணவ மாணவியர் வகுப்பு புறக்கணிப்புப் போரட்டத்தை நடத்தி வருகின்றனர். இளங்கலை மற்றும் முதுகலைப் பருவத் தேர்வுக்கான கட்டணத்தை, சென்னைப் பல்கலைக் கழகம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 30-ல் இருந்து 50 சதம்வரை கிடுகிடுவென உயர்த்தியிருக்கிறது.
 

chennai university students protest



பல்கலைக் கழக நிர்வாகத்தின் இந்த ஏதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்தும், தேர்வுக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும் மாணவர்கள் போராடி வருகின்றனர். இது ஒட்டுமொத்த மாணவர்கள் தரப்பையும் பரபரப்பாக்கி வருகிறது.


-சூர்யா
 


 

சார்ந்த செய்திகள்