Skip to main content

ஒரு ஹெல்மெட் வாங்குங்க... ஒரு கிலோ வெங்காயத்த இலவசமா எடுத்துட்டுப்போங்க... ஹெல்மெட் விற்பனையில் சேலத்து இளைஞர்

Published on 18/12/2019 | Edited on 18/12/2019

இந்தியாவில் வெங்காயத்தின் விலை உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் வெங்காய தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம் தொடர்ந்த நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் ஒரு மொபைல் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்றெல்லாம் விளம்பரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் சேலத்தில் தலைக்கவச விற்பனையாளர் ஒருவர் ஒரு தலைக்கவசம் (ஹெல்மெட்) வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற ஒரு விற்பனை திட்டத்தை ஆரம்பித்ததோடு அதில் வெற்றியும் அடைந்துள்ளார்.

 

buy a helmet ... get kilogram of onion free ...


சேலம் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முகமது காசிம், இவர் ஹெல்மெட் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்க சேலத்தில் 'ஹெல்மெட் ஷோன்' என்ற திட்டம் கடந்த திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கண்டிப்பாக வாங்க வேண்டிய தேவையும், அவசியமும் ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்நிலையில் வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் ஹெல்மெட் வாங்குவதற்காக முகமது காசிம் தனது கடையில் ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் (130 ரூபாய் மதிப்புள்ள) இலவசம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்பதாலும், ஹெல்மெட்டும் கண்டிப்பாக வாங்க வேண்டிய அவசியம் இருப்பதாலும் வாடிக்கையாளர்கள் முகமது காசிமின் கடையில் ஹெல்மெட் வாங்குவதோடு ஒரு கிலோ வெங்காயத்தையும் இலவசமாக பெற்று செல்கின்றனர்.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் முகமது காசிம் கூறுகையில், 15 ரூபாய் 10 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த வெங்காயம் தற்பொழுது 130 ரூபாயை  தொட்டுள்ளது. தலைக்கவசம் உயிர்க்கவசம் அதை கண்டிப்பாக மக்கள் வாங்கியாக வேண்டும். இந்த ஸ்கீம் போட்டதால அதிகம் பேர் ஹெல்மெட் வாங்குறாங்க இலவசமாக வெங்காயமும் எடுத்துட்டுப் போறாங்க. இதனால் வாடிக்கையாளர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி. என்னுடைய வாடிக்கையாளர்களுக்கும், ஹெல்மெட் விழிப்புணர்வுக்காக நான் இதை செய்து கொண்டிருக்கிறேன் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.