Skip to main content

திருவாரூரில் மதுகுடிக்க கோவில் சிலைகளை உடைத்த சிறுவர்கள் கைது!!

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

திருவாரூரில் மது குடிப்பதற்காக சாமி சிலைகளை உடைத்து அதில் இருந்த கம்பிகளை திருடிய 3 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

police police

 

திருவாரூர் தொழுவணங்குடி பெரியநாயகி அம்மன் கோவிலில் சுமார் 30 சிலைகள் உடைக்கப்பட்டதாகவும், அந்தப்பகுதியில் உள்ள சிறுவர்கள் சிலர் மது அருந்துவதற்கு கோவில் சிலைகளை உடைத்து உள்ளே இருக்கும் கம்பிகளை விற்று மது அருந்திவருவதாக கொடுக்கப்பட்ட புகாரில் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட 11ஆம் வகுப்பு மாணவர் தனுஷ், சிறுவன் ராமன், சத்தியசீலன் ஆகியோர் தஞ்சை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். மேலும் தப்பியோடிய பத்தாம் வகுப்பு மாணவர்கள் மனோஜ் மற்றும் மகேசை திருவாரூர் போலீசார் தேடி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்