Skip to main content

மம்மி... மம்மி... என கத்திய வடமாநில தொழிலாளர்கள்: காப்பாற்றிய தமிழர்கள்... பெருங்குடி கட்டிட விபத்து: நேரடி ஃபுல் ரிப்போர்ட்

Published on 22/07/2018 | Edited on 27/08/2018





கட்டிடம் கட்டப்படுவதற்காக கலக்கப்பட்ட சிமெண்ட் கலவை கூட காயாமல் அப்படியே இருக்கிறது கட்டிடம் கட்ட பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் ஒரு ஓரத்தில் அப்படியே தொங்கிக் கொண்டிருந்தது. சனிக்கிழமை அவர்களுக்கு சம்பள நாள். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
 

சென்னை தரமணியில் உள்ள கண்ணகி நகர் பகுதியில் எட்டு மாடி  தனியார் மருத்துவ மனை கட்டிடம் முடிக்கப்படும் தருவாயில் இருக்கிறது. அந்த மருத்துவமனைக்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய ஜெனரேட்டர்  வைக்கும் இடம்  கட்டப்பட்டு வந்தது. அந்த மருத்துவமனை கட்டும் பணி ஆனது  இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது . இந்த நிலையில்தான்  எப்போதும் போலவே நேற்று மாலை 7 மணி அளவில் 30க்கும் மேற்பட்டோர் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் . அப்போது தான் சுவரை எழுப்புவதற்கு கட்டப்பட்டிருந்த சாரம் எதிர்பாராதவிதமாக  சாய்ந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் அருகிலுள்ள வீடுகளில் இருந்த மக்கள் சிலரை மீட்டு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதை அடுத்து வந்த காவல்துறை மற்றும் மீட்புப் பணி வீரர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . 
 

நமக்கு தகவல் கிடைத்தவுடன் நேரடியாக விபத்து நடந்த இடத்திற்கு சென்றோம் அந்த மருத்துவமனை பகுதிக்கு செல்லக்கூடிய அனைத்து இடங்களும் போலீசாரால் தடுப்புகளை கொண்டு யாரும் உள்ளே செல்லாதவாறு தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர் . தேசிய பேரிடர் மீட்பு குழு மாநிலம் பேரிடர் மீட்பு குழு மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் என 300க்கும் மேற்பட்டோர் களத்தில் இறங்கி மீட்புப் பணியை துரிதப்படுத்தினர். போலீஸ் உயர் அதிகாரிகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் மூத்த அதிகாரி என்ன பலரும் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்திருந்தனர் தென்சென்னை மக்களவை உறுப்பினரான டாக்டர் ஜெயவர்தன் மற்றும் அந்தப் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர்  பணியை நேரடியாக கண்காணித்தனர். இந்த மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் கொண்டுவரப்பட்டது குறிப்பாக அதிகம் வெளிச்சம் கொண்ட பெரிய லைட்டுகள் கொண்டுவரப்பட்டது . சம்பவம் நடந்த பகுதியை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் இருப்பதால் மக்கள் கூட்டம் அதிக அளவில் சுற்றி காணப்பட்டது. அந்தப் பகுதியில் இருந்து அவர்களை அப்புறப்படுத்த போலீசார் சிறிது அளவு சிரமப்பட்டனர். இரவு நேரத்தில் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்ட மீட்புக்குழுவினர் மற்றும் மீடியாக்களுக்கு அந்த பகுதிவாசிகள் தண்ணீர் கொடுத்து உதவினர். ஒரு கட்டத்தில் மீடியாக்களும் மீட்புப் பணிகளை படம் பிடிக்கக் கூடாது என சிறிது தூரம் தள்ளி நிற்க வைக்கப்பட்டனர் . அதன் பின்னர்  தொடர்ந்த  மீட்புப் பணியில் இரவு 12 35 மணி அளவில் ஆண் சடலம் ஒன்று இடது கால் இல்லாமல் மீட்புக் குழுவினரால் மீட்க்கப்பட்டது மீட்புக் குழுவினருக்கு இடையூறு இல்லாமல் அருகிலிருந்த அபார்ட்மென்ட்குல் நாமும் சில மீடியாக்களும் கேமராக்களுடன் காத்திருந்தோம் உடலை எடுக்கப்பட்டதை படம் பிடிக்க கூடாது என்பதற்காகவே சுவற்றின் மேல் ஏறி அமர்ந்து இருந்த வீடியோ கேமராமேன்கள் மற்றும் போட்டோகிராபர்களை கீழே இறங்கும்படி போலீசார் தொடர்ந்து  மிரட்டி வந்தனர். ஆனால் அந்த அப்பார்ட்மெண்டில் மேல் பகுதிக்கு சென்று அனைவரும் உடல் எடுக்கப்படுவதில்லை தொடங்கி ஆம்புலன்சில் ஏற்றப்படுவது வரை பதிவு செய்து கொண்டனர் எந்தவிதமான இடைவெளியும் இல்லாமல் மீட்புப் பணி தொடர காங்கிரட் கலவைகளும் பெரிய அளவிலான தகர சீட்டுகளும் அதிக கணம் கொண்ட கம்பிகளும் இருந்தது மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது. ஆகையால் தொடக்கத்திலிருந்து ஜேசிபி பயன்படுத்தப்பட்டு அவற்றை அப்புறப்படுத்த பட்டன மீட்கப்பட்ட உடலின் கால்கள் மூன்று மணி நேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணி அளவில் மீட்கப்பட்டனர் அதன் பின்னர் மீட்புப் பணி நிறுத்தப்பட்டு மோப்பநாய்கள் கொண்டு வரப்பட்டு விபத்து நடந்த பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது
 

இந்த மருத்துவமனைக்கு அருகில் வசித்து வரும் சிலரிடம் பேசினோம் " இந்த மருத்துவமனையை கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு கட்டத் தொடங்கப்பட்ட தாகவும் அப்போதிருந்து எந்த விமான விபத்தும் ஏற்படவில்லை என பலரும் பேசி வந்திருக்கிறோம். ஆனால் இன்றைய தினம் இப்படி ஒரு விபத்து நடைபெற்றிருக்கிறது.  இந்த மருத்துவமனையின் கீழ் தளம் அமைக்க பெரிய அளவில் குறிகள் தோண்டப்பட்டபோது அருகிலிருந்த பல பெரிய கட்டிடங்களில் பாதிப்புக்குள்ளானது மேலும் சில கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது . அதன் பின்னர்  பலரும்  அதுகுறித்து  முறையிட்டு இருக்கின்றனர் அப்போது இந்தப் பிரச்சனை வந்த அதே நாளில் எங்கு இருந்து அத்தனை ஆட்கள் கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை அவர்களை வைத்து மணல் மூட்டைகளை கொண்டு கீழ்த்தளம் முழுமையாக நிரப்பினார்கள். இந்த மருத்துவமனை கட்டப்பட்டு வரும் பகுதியில் கிட்டத்தட்ட எட்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பலர் புதிதாக வீடு கட்டி இருந்தனர். அந்த சமயத்தில் அந்த இடம் மொத்தமாக தேவைப்பட்ட போது விலை கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறது ஆகையால் அங்கு புது வீடு கட்டியவர்கள். அனைவரும் வேறு இடங்களுக்கு செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது அதன் பின்னர் அந்த புதிய வீடுகள் முழுமையாக இடிக்கப்பட்டு தற்போது மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது . இந்த மருத்துவமனை கட்டத் தொடங்கியது முதல் வட மாநிலத்தவர்கள் கொண்டு இது கட்டப்பட்டு வந்திருக்கிறது. மருத்துவமனை கட்டப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் வட மாநிலத்தவர்கள் தங்குவதற்கு பல்வேறு சிறு அளவில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது . இந்த கட்டிடம் கட்டப்பட்டது தொடங்கியது முதல் இரவு பகலாக வேலைகள் நடைபெற்று வந்திருக்கிறது சாயந்திரம் ஒரு 7 மணி இருக்கும் அப்ப திடீர்னு ஒரு சவுண்டு வந்துச்சு எல்லாரும் வீட்டை விட்டு வெளியே வந்து வெளியில் வந்து பார்த்தப்போ அந்தப் பசங்க சிலர் "மம்மி  மம்மி மம்மி" கத்திக்கிட்டு வந்தாங்க நல்லா வேலை செஞ்சிட்டு இருந்தவங்க ஏன் இப்படி கத்திட்டு வராங்கன்னு பதறிப்போய் அந்த இடத்தை நோக்கி ஓடினோம் சிலருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் வந்துடுச்சு ஒரு சிலருக்கு வந்து கையில அடிபட்டிச்சு அந்த அடிபட்ட நேரத்திலேயே வந்து பெரிய அளவில் வந்து வீங்கிக் கிடந்தது அதுமட்டுமில்லாம இடுப்புல ரெண்டு மூணு பேருக்கு அடிபட்டிச்சு எல்லாருக்கும் முதல்ல தண்ணி கொடுத்தான் அதுக்கப்புறம் ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணி அனுப்பி வச்சான் வர சொன்னேன். அப்ப ஒருத்தரு காங்கிரட் இருந்து தூக்கி குடுக்குறே வேலை செஞ்சுட்டு இருப்பாரு போல அந்த காங்கிரட் எல்லாம்  அவர் மேல கொட்டி கண்ணக்கூட திறக்க முடியாம அப்படியே நடந்து வந்தார் அவர் மேல ஃபுல்லா தண்ணி ஊத்தி சுத்தம் பண்ணி அவர ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வச்சசோம் . யாரும் இதில் சாக கூடாதுன்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு இருந்தோம் ஆனா ஒருத்தர் செத்தது எங்களுக்கு ரொம்பவே வருத்தமா இருக்கு என்றார்கள்.


தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு காவல்துறையினர் என கிட்டத்தட்ட ஒரு 300க்கும் மேற்பட்டோர் மாலை எட்டு முப்பது 9 மணி அளவில் இருந்து தொடர்ந்து மீட்பு பணி அதிகாலை 3 மணி வரை எந்தவிதமான நிறுத்தமும் இல்லாமல்  இல்லாமல் தொடர்ந்து நடந்தது சரியான திட்டமிடுதல் இல்லாத காரணம் மட்டுமே இந்த விபத்துக்கு காரணம் என்கிறார்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த சில அதிகாரிகள்.
 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்; மீட்கும் பணியில் ஏற்பட்ட சோகம்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Labor trapped in landslide in chennai

சென்னை, கிழக்கு தாம்பரம் அருகே ஆதிநகர் பகுதி ஒன்று உள்ளது. இங்கு, தாம்பரம் மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனம் மூலம் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. பாதாள சாக்கடைக்கான பள்ளம் தோண்டி பைப்லைன் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று (16-03-24) மாலை திடீரென பள்ளத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், திட்டக்குடியைச் சேர்ந்த தொழிலாளர் முருகானந்தம் என்பவர் மண் சரிவில் சிக்கினார். இந்த சம்பவம் குறித்து அங்குள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், மண் சரிவில் சிக்கியிருந்த முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

அதில், ஜே.சி.பி வாகன உதவியுடன் தீயணைப்புத் துறையினர், முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது தலை மட்டும் வந்துள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, முருகானந்தனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

தொடர் விபத்து; திடீரென சாலையில் கவிழ்ந்த லாரி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 truck overturned on the Thiruvananthapuram National Highway

கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து அதிக அளவிலான கனிம வளங்களை அதிக பாரத்தோடு கேரளாவுக்கு கடத்திச் செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இந்நிலையில், கனிம வளங்கள் திருடப்படுவதை தடுக்க பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து, கனிம வள கொள்ளையை தடுக்கும் வண்ணம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கனிம வள கொள்ளையில் ஈடுபடும் லாரிகள், இதே பகுதியில் விபத்துகளிலும் அடிக்கடி சிக்கிக்க் கொள்கின்றன. இதன் காரணமாக இந்தப் பகுதிகளில் விபத்துக்கள் அதிகமாக நடக்காமலிருக்க, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றம் பெற்றது. இதனால், நாகர்கோவில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் விரிவுப்படுத்தும் பணி தொடங்கியது. அதே சமயம் இந்தப் பகுதியில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க சாலைகளில் பல இடங்களில் கான்கிரீட் கட்டைகளால் ஆன சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இது அமைக்கப்பட்ட பிறகு விபத்துகள் குறையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சென்டர் மீடியன் அமைக்கப்பட்ட பிறகுதான் தற்போது இந்தப் பகுதியில் அதிகமாக விபத்து ஏற்பட ஆரம்பித்துள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதில் கடந்த 10 நாட்களில் மட்டுமே சுமார் 6க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மேலும் ஒரு விபத்து நடந்துள்ளது. மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி லோடு ஏதும் இல்லாமல் டாரஸ் லாரி ஒன்று சென்றுள்ளது.

அப்போது, அந்த டாரஸ் லாரி திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இவ்வாறு வேகமாகச் சென்ற அந்த டாரஸ் லாரியை, வெள்ளிக்கோடு பகுதியில் உள்ள வளைவில் ஓட்டுனநர் திருப்ப முயன்றுள்ளார். ஆனால், சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த டிவைடர் சிமெண்ட் கட்டையில் என மோதியுள்ளது. உடனே சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் அந்த லாரியை அங்கேயே நிறுத்த முயற்சி செய்துள்ளார். அப்போது டாரஸ் லாரியை நிறுத்த ஓட்டுநர் பிரேக் பிடித்தபோது, அந்த லாரி வேகமாக புரண்டு பெரும் சத்தத்துடன் பொத்தென்று கீழே விழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.