Published on 28/01/2020 | Edited on 28/01/2020
தமிழகத்தில் அரியலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இரு மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
![ariyalur, kallakkurichi districts new medical colleges union government approval](http://image.nakkheeran.in/cdn/farfuture/qzqdyHKOIIO9FQCAWOKNfBtLUOe0wq2m89K3-p1zxG0/1580225286/sites/default/files/inline-images/union%20government4.jpg)
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இரு மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ரூபாய் 650 கோடியில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்பில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன. தமிழகத்தில் ஏற்கனவே 9 புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.