Skip to main content

அமிர்தரசஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் 

Published on 19/10/2018 | Edited on 19/10/2018
amt

 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோடா பதக்கில் தசரா கொண்டாட்டத்தின்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கோரவிபத்தில் ரயில் மோதி 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இவ்விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதியுதவி என்று பஞ்சாப் முதல்வர் அறிவித்துள்ளார்.  விபத்தில் காயம் பட்டோருக்கு  சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.   மேலும், விபத்து நடந்த அமிர்தசரஸ்க்கு பஞ்சாப் முதல்வர் நாளை செல்கிறார்.

 

சார்ந்த செய்திகள்