Skip to main content

7 பேர் விடுதலை விவகாரம்;ஒரு மாத காலமாகியும் ஆளுநர் கையெழுத்திடாதது ஏன்? அதனை தமிழக அரசும் கண்டுகொள்ளாதது ஏன்?- வேல்முருகன்

Published on 04/10/2018 | Edited on 04/10/2018

7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில் ஒருமாத காலம் ஆகியும் ஆளுநர் கையெழுத்திடாதது ஏன்? அதனை தமிழக அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பதும் ஏன்? என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேலுமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

7 Freedom of Affairs, Why is the Governor not signed for a month? Why did the Government of Tamil Nadu not recognize it? - Velmurugan

 

கடந்த மாதம் 6ந் தேதி, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவரையும், சட்டப் பிரிவு 161ன்கீழ் தமிழக அரசு விடுதலை செய்யலாம் என்று தீர்ப்பளித்து, இவர்களின் விடுதலையைத் தடுத்த வழக்கை முடித்துவைத்தது, நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு.

 

மறுநாளே, தமிழ்நாடு அமைச்சரவை கூடி, சட்டப் பிரிவு 161ன்கீழ் அவர்களை விடுவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால் ஒரு மாத காலமாகிறது; அத்தீர்மானத்தில் ஆளுநர் இன்னும் கையெழுத்திடவில்லை. 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில் ஒருமாத காலம் ஆகியும் ஆளுநர் கையெழுத்திடாதது ஏன்? அதனை தமிழக அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பதும் ஏன்?

 

28 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருப்பவர்கள்; தீர்மானத்தைப் பெற்ற மறு நிமிடமே அதில் கையெழுத்திட்டிருக்க வேண்டும் ஆளுநர். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.

 

அதனால் அவர் கையெழுத்திட வலியுறுத்தி போராட்டங்கள் நடந்தன. அப்போதும் அவர் கையெழுத்திடவில்லை.

 

இந்நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆளுநரை நேரில் சந்தித்து அவர்களை விடுவிக்கக் கேட்டுக்கொண்டார். அப்போது “பரிசீலிக்கிறேன்” என்று பதிலளித்தார். அவர் அப்படி பரிசீலித்தாரோ என்னவோ தெரியவில்லை; ஆனால் இன்னும் எழுவரையும் விடுவிக்கும் தீர்மானத்தில் மட்டும் கையெழுத்திடவே இல்லை.

 

இப்படியிருக்கையில், தமிழ்நாடு அரசும், எழுவர் விடுதலைத் தீர்மானத்தைப் பற்றியோ ஆளுநர் அதில் கையெழுத்திடாதது பற்றியோ கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அதே சமயம், அதிமுக அரசின் நடவடிக்கைகள் மற்றும் இதர நிகழ்வுகளைப் பார்த்தால், எழுவர் விடுதலை விடயத்தை மடைமாற்றவும் அதிலிருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்பவும்தானோ என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றன.

 

2009ல் நடந்த தமிழீழ இனப்படுகொலைக்கு திமுக-காங்கிரசைக் கண்டித்து இப்போது அதிமுக நடத்தும் கண்டனக்கூட்டம், தமிழ்நாட்டில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம், மேலும் 4 எம்எல்ஏக்களின் பதவியைப் பறிக்கும் திட்டம் ஆகிய இவையெல்லாம், சட்டப்பிரிவு 161ன்கீழ் எழுவர் விடுதலையைப் பின்னுக்குத் தள்ளவே கிளப்பப்படுகின்றன என்று சொன்னால் அதை மறுக்க முடியுமா?

 

வேண்டுமென்றே, 7 பேரின் விடுதலை விடயத்தில் அரங்கேற்றப்படும் கயமைத்தனங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது.

 

ஆளுநர் இதில், “பரிசீலிக்கிறேன்” என்று சொல்வதே கூட சட்டவிரோதமாகும்; ஏனென்றால், அரசமைப்புச் சட்டப்படி அமைச்சரவையின் பிரதிநிதிதான் ஆளுநர் என்பவர். அவருக்கென்று மாற்று எண்ணம் கிடையாது, கூடாது. ஆகவேதான் சட்டப்பிரிவு 161ன்கீழ் எழுவரையும் விடுவிக்கும் தீர்மானத்தில் கையெழுத்திடாமல் அவர் காலங்கடத்துவதை அனுமதிக்க முடியாது.

 

எனவே சட்டப்படி, அடுத்த தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி உடனடியாக ஆளுநரிடம் கையெழுத்துப் பெறுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக அக்கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

அமைச்சரை பதவி நீக்கம் செய்ய மேற்கு வங்க ஆளுநர் வலியுறுத்தல்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
West Bengal Governor insists on dismissing the minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்ட்டி மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டார். அப்போது தேர்தலில் போட்டியிடும் 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் மம்தா பானர்ஜி அறிமுகம் செய்திருந்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜியும் அக்கட்சியினரும் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஆனந்த் போஸ் மேற்கு வங்க அரசை வலியுறுத்தியுள்ளார். அதே சமயம் ஆளுநர் ஆனந்த் போஸ் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதாக அமைச்சர் பிரத்யா பாசு பதிலடி கொடுத்துள்ளார்.