Skip to main content

பாஜக வேட்பாளர் பட்டியல் இழுபறி ஏன்? பரபரப்பு தகவல்கள் 

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

 

தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியவை தமிழகத்தில் மாநில கட்சியின் தலைமையில் கூட்டணியை வைத்துள்ளது. திமுக தலைமையில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளை பெற்றுள்ளது. அதிமுக தலைமையிலல் இடம் பெற்றுள்ள பாஜக கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை ஆகிய ஐந்து தொகுதிகளை பெற்றுள்ளது. 

 

மாநில கட்சிகளான திமுக, அதிமுக வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ராகுல்காந்திதான் பிரதமர், மோடிதான் மீண்டும் பிரதமர் என பிரச்சார களத்திலும் இறங்கிவிட்டது. தேசிய கட்சிகள் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இன்னும் சற்று நேரத்தில், மாலையில், இன்று, நாளை, நாளை மறுநாள் என வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட காலதாமதம் ஆகிறது. 

 

bjp


 

பாஜக தரப்பில் விசாரித்தபோது, கட்சியின் மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்திரராஜன் இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார். மாநிலத் தலைவராக இருந்து போட்டியிடவில்லை என்றால், டெல்லி மேலிடம் தன்னை மதிக்கவில்லை என்று இங்குள்ளவர்கள் நினைப்பார்கள், ஆகையால் தூத்துக்குடியை கேட்கிறார். ''திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிட முடிவு எடுத்து நீண்ட நாட்களாக களப்பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இதனை தெரிந்துதான் அதிமுக நமக்கு தூத்துக்குடியை தள்ளிவிட்டுள்ளது. ஆகையால் போட்டியிட்டாலும் வெற்றி வாய்ப்பை பெற முடியாது, வேறு தொகுதியை கேளுங்கள், இல்லையென்றால் போட்டியிடும் எண்ணத்தை விடுங்கள்'' என்று நாடார் சமூகத்தைச் சேர்ந்த சிலர் அட்வைஸ் செய்கிறார்களாம் தமிழிசைக்கு. 
 

ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன் போட்டியிட விரும்புகிறாராம். ஆனால் பாஜகவின் சீனியர்களோ, திமுக கூட்டணியில் உள்ள இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடுகிறது. ஆகையால் பாஜக வேட்பாளராக முஸ்லீம் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்களாம். 

சிவகங்கையில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் எச்.ராஜா. கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் களத்தில் போட்டியிடுகிறார். கன்னியாகுமரியில் இந்த முறை காங்கிரஸ் பொன்னாருக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. 
 


பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாக தாமதம் ஆகவதற்கு காரணம் கோவைதான் என்கிறார்கள். கருப்பு முருகானந்தம், சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில நிர்வாகிகள் சிலர் கோவையில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வலியுறுத்தி வருகிறார்களாம். மொத்தம் 25 பேர் போட்டியிடுவதால் இவர்களை சமாதானம் செய்து வேட்பாளரை முடிவு செய்தால் பட்டியல் ரிலீஸ். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.