Skip to main content

வேலூர் மாவட்டம் : திமுக வேட்பாளர்களும் விவரங்களும்!

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

dmk

 

வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) என 5 தொகுதிகள் உள்ளன. இந்த 5 தொகுதிகளில், 4 தொகுதிகளில் அதிமுகவும், ஒரு தொகுதியில் புரட்சி பாரதமும் போட்டியிடும் என வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது அதிமுக. புரட்சி பாரதம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. எனவே, 5 தொகுதிகளிலும் உதயசூரியனும், இரட்டை இலையும் போட்டியிடுகின்றன.

 

vellore constituency
                                                                                            கார்த்திக்


வேலூர் – கார்த்திக்: வேலூர் மாநகர மாவட்டச் செயலாளராக உள்ளார். வேலூர் மாநகராட்சியின் முதல் மேயர். 2016ல் வேலூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர், மீண்டும் இரண்டாவது முறையாக அதே தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

 

vellore constituency
                                                 துரைமுருகன்

 

காட்பாடி – துரைமுருகன்: திமுக பொதுச்செயலாளராக உள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ளார். தொடர்ச்சியாகப் பல முறை இந்தத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்துவருகிறார். இந்தமுறையும் இவருக்கே சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

 

vellore constituency
                                                 நந்தகுமார்

 

அணைக்கட்டு – நந்தகுமார்: வேலூர் மாவட்டச் செயலாளராக உள்ளார். இதே தொகுதியில் 2016ல் நின்று வெற்றி பெற்றவர், மீண்டும் இரண்டாவது முறையாக அதேதொகுதியில் சீட் பெற்றுள்ளார்.

 

vellore constituency
                                                            சீத்தாரமான்

 

கே.வி.குப்பம் (தனி) – சீத்தாரமான்: கே.வி.குப்பம் ஒன்றியக் குழுத் தலைவராக இரண்டு முறை இருந்துள்ளார். 2011, 2016 என இரண்டு முறை சீட் பெற்று தோல்வியைச் சந்தித்தவர். மூன்றாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

vellore constituency
                                                              அமுலு

 

குடியாத்தம் (தனி) – அமுலு: குடியாத்தம் ஒன்றியச் செயலாளர். கல்லூர் ரவியின் தம்பி மனைவி. கடந்த முறை கே.வி.குப்பத்தில் நின்றார். இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர், இவரது கணவர் வன்னியர் என்பதால், அங்கு சர்ச்சை எழுந்தது. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார். இந்த முறை குடியாத்தம் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.