Skip to main content

பிரபல தொழிலதிபர் செய்த உதவி... திமுக, அதிமுகவை அதிர வைத்த தொழிலதிபர்... பாஜகவில் இணைய திட்டம்?

Published on 10/04/2020 | Edited on 10/04/2020


திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க. எம்.பி.யாக இருந்தவர் முருகையன். மறைந்த இவருக்கு பேரன் உறவுமுறையான தொழிலதிபர் தணிகைவேல்; ம.தி.மு.க., தே.மு.தி.க., தி.மு.க. எனப் பல கட்சிகள் மாறியவர். சென்னையில் சினிமா தயாரிப்பாளராகவும், பைனான்ஸ் பார்ட்டியாகவும் இருக்கிறார்.

 

dmk



தற்போது, ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலதிபர் தணிகைவேல், திருவண்ணாமலையில் தனது ஆதரவாளர்கள் உள்ள சமுத்திரம் காலனி, கல்நகர், தியாகி அண்ணாமலை நகர், பேகோபுரம் தெரு, செட்டிக்குளமேடு, ஆடையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏழ்மையானவர்களின் பட்டியலைத் தயார் செய்துள்ளார்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான 10 கிலோ அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய், கடுகு, மிளகாய்த்தூள், சோப்பு எனத் தலா ரூ.600 மதிப்புள்ள தொகுப்பை வழங்கிவருகிறார். குறிப்பாக, இந்தப் பொருட்களை நேரடியாக வழங்காமல், அந்தந்த பகுதிகளில் இருக்கும் இளைஞர் அமைப்புகள் மூலமாகவே மக்களிடம் கொண்டு சேர்க்கிறார். முதல் இரண்டு கட்டமாக மூவாயிரம் குடும்பங்களுக்கும், மூன்றாவது கட்டமாக 2 ஆயிரம் குடும்பங்களுக்கும் பொருட்களைத் தொடர்ந்து வழங்கி வருவதாகத் தணிகைவேல் நம்மிடம் தெரிவித்துள்ளார். சுமார் 30 லட்ச ரூபாய் செலவில் ஒரு தொழிலதிபர் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்திருப்பது ஆளுங்கட்சி, எதிர்கட்சி பாரபட்சமில்லாமல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பா.ஜ.க.வில் இணைவதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறாராம் தணிகைவேல்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.