Skip to main content

அப்பட்டமான பொய்யை சொல்லுகிறார் நிர்மலா சீதாராமன் -மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 28/02/2019 | Edited on 28/02/2019

 

கோயம்புத்தூரில் புதன்கிழமை (27-02-2019) நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
 

அப்போது அவர், “ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான ஆட்சி தான் தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக ஆட்சி.  ஒரு ஆட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் தான் நரேந்திர மோடியின் மத்திய ஆட்சி, எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க ஆட்சி. அதனால் தான் இன்றைக்கு இந்தியாவை மீட்போம், தமிழகத்தைக் காப்போம் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொள்கை முழக்கமாக வைத்து மாநாடு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
 

இந்தியாவை மீட்போம் என்றால் யாரிடம் இருந்து மீட்பது?
 

இந்தியாவின் தேசபக்தர்களாகத் தங்களை அடையாளம் காட்டிக் கொண்டு இந்தியாவை ஒரு சில கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் விலை பேசி விற்றுக்கொண்டு இருக்கின்ற நரேந்திர மோடி கூட்டத்திடம் இருந்து இந்தியாவை மீட்டாக வேண்டும் என்று நாம் முழங்கிக் கொண்டிருக்கிறோம்.


mkstalin 81



‘என்னுடைய ஆட்சி தான் ஊழல் இல்லாத ஆட்சி' என்று சொல்கிறார் நரேந்திர மோடி. அப்படியானால் ரஃபேல் விவகாரம் என்ன? ஊழல் இல்லையா? ரஃபேல் ஊழல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வைத்துக் கொண்டிருக்கின்ற எந்தக் கேள்விக்காவது அவர்களால் நேரடியாக பதில் சொல்ல முடிந்ததா? ஒரு சதவிகிதம், இரண்டு சதவிகிதம் அல்ல, 41 சதவிகிதம் விலை உயர்வு கொடுத்து விமானங்களை வாங்கி இருக்கிறார்கள். யாருக்கு அந்த லாபம் செல்கிறது. ஒரு தனியார் நிறுவனத்துக்கு. இது ஊழல் இல்லையா?

 

அண்மையிலே பெங்களூருவில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், 'மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு இந்தியாவில் எந்த ஊழலும் நடைபெறவில்லை' என்று பேசி இருக்கிறார். பாதுகாப்புத் துறையில் நடந்த இந்த ஒரு ஊழல் போதாதா? அது ஊழல் கிடையாதா?
 

இந்த செய்தி வெளியான நாளிதழ்களின் இன்னொரு பக்கத்தில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால்,
 

'ஐந்து விமான நிலையங்களின் பராமரிப்பு அதானி குழுமத்திடம் ஒப்படைப்பு' என்று செய்தி வெளியாகி இருக்கிறது. இந்திய விமான ஆணையகம் நிர்வகிக்கும் பெருநகரங்கள் அல்லாத 6 விமான நிலையங்களை பராமரிக்கும் பணியை தனியாரிடம் விடுவதற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு முடிவெடுத்ததாகவும் அதில் ஐந்து விமான நிலையங்களை பராமரிக்கும் ஏலத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைப்பதாக முடிவெடுத்திருப்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
 

குஜராத்தில் முதலமைச்சராக இருந்த காலத்தில் இருந்து பிரதமர் ஆனபிறகும் ஒரே நபருக்கு பல்வேறு தொழில் முதலீட்டு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்றால் அது ஊழல் அல்லாமல் வேறு என்ன? எங்களுக்கு எல்லாம் என்ன சந்தேகம் என்றால், அந்த நிறுவனமே மோடிக்குச் சொந்தமானது தானோ என்ற சந்தேகம் தான்.
 

ஆகவே, ஒரே நாடு, ஒரே மதம், ஒரே பண்பாடு என்று சொல்லி இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க நினைக்கின்ற ஆட்சி தான் பா.ஜ.க ஆட்சி. நரேந்திர மோடி ஊழலிலும் 'ஒரே நிறுவனம்' என்று முடிவெடுத்துச் செயல்படுகிறார். நரேந்திரமோடியின் ஆட்சியில் ஊழல் ஒருமுகப்பட்டு ஒரே இடத்தில் குவிந்துள்ளது. அதுதான் உண்மை.
 

இன்னொன்றையும் நிர்மலா சீதாராமன் சொல்கிறார். என்ன தெரியுமா? 'இப்போது காஷ்மீரில் நடந்துள்ள தாக்குதலைத் தவிர வேறு எந்த தாக்குதலும் பா.ஜ.க ஆட்சியில் நடக்கவில்லை' என்று பச்சைப் பொய்யை சொல்லியிருக்கிறார். அந்த பச்சைப் பொய்யை சொல்லியிருக்கும் நிர்மலா சீதாராமன் அவர்களின் கவனத்துக்கு நான் கொண்டு வருகிறேன்.

 

nirmala-sitharaman


2014ம் ஆண்டு உரியில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 2016ம் ஆண்டு பாமேபரில் நடந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் இரண்டு பேர் மாண்டு போயிருக்கிறார்கள். அதே 2016ம் ஆண்டு ஜம்மு ராணுவ முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் பலியாகி இருக்கிறார்கள். இப்போது 44 வீரர்கள் பலியாகி இருக்கிறார்கள்.
 

அதில் இரண்டு பேர் நம்முடைய தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள். ஒருவர் அரியலூர் மாவட்டம் இன்னொருவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவர். அந்த இரண்டு வீரர்களின் வீட்டுக்கும் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு தான் வந்திருக்கிறேன். இத்தனை தாக்குதல்கள் நடந்திக்கிறது, இதையெல்லாம் மூடி மறைத்து எந்த தாக்குதலும் நடக்கவில்லை என ஒரு அப்பட்டமான பொய்யை அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்கள் சொல்லுகிறார் எனச் சொன்னால் இது எதை காட்டுகிறது?
 

ஆகவே, நான் திரும்ப திரும்ப சொல்கிறேன். இந்தியாவில் நடைபெறும் இந்த பா.ஜ.க ஆட்சி கார்ப்பரேட்டுகளால் கார்ப்பரேட்டுகளுக்காக நடத்தப்படும் கார்ப்பரேட் ஆட்சி. இந்த ஆட்சி தொடர்ந்தால் விவசாயிகள் தற்கொலை தான் செய்துகொண்டு மாண்டு போவார்கள்.

இந்த ஆட்சி தொடர்ந்தால் நெசவாளிகள் கஞ்சித் தொட்டிகளை தான் திறப்பார்கள். இந்த ஆட்சி தொடர்ந்தால் நாட்டில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கவே கிடைக்காது. இந்த ஆட்சி தொடர்ந்தால் ஒரு அனிதா இல்லை, தொடர்ந்து பல அனிதாக்கள் தற்கொலை தான் செய்து கொள்வார்கள். இந்த ஆட்சி தொடர்ந்தால் மாநிலங்களுக்கு முறையாக மத்திய அரசு தரவேண்டிய எந்த நிதியும் கிடைக்காது.
 

மொத்தத்தில் மோடி அரசு என்பது இந்தியாவில் உள்ள தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்புக்கும் ஆபத்தான ஆட்சி. அதனால் தான் அதனை வீழ்த்துவதற்கு நாம் ஒன்று சேர்ந்திருக்கிறோம்''. இவ்வாறு பேசினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.