Skip to main content

லிஸ்ட் கொடுத்த பொறுப்பாளர்கள்... பிரேமலதா ஆலோசனை 

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

 

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதுகுறித்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த சொல்லியிருந்தார். 


 

 

அதன்படி இன்று பிரேமலதா விஜயகாந்த், வி.இளங்கோவன், அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், எல்.கே.சுதீஷ், ப.பார்த்தசாரதி, எஸ்.சந்திரா ஆகியோர் முன்னிலையில் உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதால் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் எந்தெந்த இடங்களில் போட்டியிட்டால் தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று நாங்கள் எடுத்து சொல்லியிருக்கிறோம். அதனை கட்சித் தலைமை ஆய்வு செய்து, கூட்டணியில் கேட்டு பெற்று தரும் என்று நம்புகிறோம் என்றனர். 

சார்ந்த செய்திகள்