Skip to main content

தாமரையை மலர விடாமல் தடுத்த கர்நாடகவாழ் தமிழர்கள்! 

Published on 15/05/2018 | Edited on 15/05/2018

‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தனது ஒவ்வொரு பேட்டியிலும் சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால், அதற்கான அறிகுறிகள் எதுவுமே இல்லாமல் தேர்தல் முடிவுகள் கடந்துபோகும். 

 

அந்தவகையில், தமிழகத்தில் அல்ல தமிழர்கள் வாழும் எந்த பகுதியிலும், பா.ஜ.க.வின் தாமரை மலரவே முடியாது என்பதை அடித்துக் கூறியிருக்கிறது கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள். 

 

BJP

 

கர்நாடக மாநிலத்தில் நடந்துமுடிந்த சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. தொடக்கம் முதலே பா.ஜ.க. நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையை பெற்று ஆட்சியமைக்கும் வாய்ப்பிற்கு அருகில் சென்றது. ஆனால், அந்த நிலை நீண்டநேரம் நீடிக்காமல், பா.ஜ.க. 104 தொகுதிகளோடு தனது வெற்றிக்கணக்கை முடித்துக் கொண்டது. தற்போது, காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் கோரியிருக்கின்றன. 

 

இந்தத் தேர்தலில் தமிழர்கள் வாழும் பகுதிகள் பலவற்றில், பா.ஜ.க. வெற்றி பெறமுடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில், காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்றிருக்கிறது. காந்தி நகர், சி.வி.ராமன் நகர், சாந்தி நகர், புலிகேசி நகர், சர்வக்ஞா நகர், சிவாஜி நகர் என தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களே முன்னிலை வகுத்துள்ளனர்.

 

மத்திய அரசின் திட்டங்கள் என்ற பெயரில் தமிழகம் மீதான தாக்குதல்களுக்கு உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் குரல் கொடுப்பார்கள். அந்த வகையில், கர்நாடகாவில் தேர்தல் வழியாக அந்தக் குரல் ஒலித்திருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதற்கு முதல்வரும் வைகோவும் பதில் சொல்லியே ஆக வேண்டும்' - தமிழிசை செளந்தரராஜன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'The Chief Minister and Vaiko should answer this'-Tamilisai interview

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'ஈரோட்டில் மதிமுக எம்.பி இறந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. வாரிசு அரசியல் ஜனநாயகத்தை படுகொலை செய்து விடும் என்று பிரதமர் சொல்லி இருந்தார். நன்றாக பணியாற்றிக் கொண்டிருந்த மதிமுக நாடாளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறது இவர்களின் குடும்ப ஆசை, வாரிசு ஆசை. இதற்கு நான் வைகோவையும் குற்றம் சாட்டுவேன். ஸ்டாலினையும் குற்றம் சாட்டுவேன்.

ஒரு அனுபவம் மிக்கவருக்கு சீட்டு கொடுக்காமல் இப்படி நடந்துவிட்டது. வைகோ எதற்காக திமுகவை விட்டு வெளியே வந்தார். கலைஞர் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று வெளியே வந்தார். ஆனால் இன்று அவருடைய மகனுக்கு சீட்டை கொடுத்துவிட்டு ஒரு அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம். நீட்டில் ஒரு தவறு நடந்த உடனே அதை உலக அளவில் வைத்து பிரபலப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலை செய்வது தமிழகத்தில் தான் இன்று நடக்கிறது. மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலினும் பதில் சொல்ல வேண்டும். வைகோவும் பதில் சொல்ல வேண்டும். இது வாரிசு அரசியலின் அபாயகரம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இதே திமுகவில் உதயநிதிக்கு கிடைக்கின்ற அங்கீகாரம் சாதாரண தொண்டருக்கு கிடைக்கிறதா?'' எனக் கேள்வி எழுப்பினார்.

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.