Skip to main content

நடராஜன் உடல் தஞ்சை வந்தது; சசிகலாவும் கூடவே வந்தார்

Published on 20/03/2018 | Edited on 20/03/2018
sasikala natarajan

 

புதிய பார்வை ஆசிரியரும் சசிகலா கனவருமான நடராஜனின் உடல் தஞ்சாவூர் அருளானந்தம் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. 

 

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சென்னை குலோபல் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவந்த நடராஜன், நேற்று இரவு  காலமானார். அவரது உடல் சென்னையில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. 

 

இந்தநிலையில் பெங்களூர் சிறையில் இருந்த சசிகலா பரோல் கேட்டு சில நாட்களுக்கு முன்பிளிருந்தே மனு செய்திருந்தார், ஆனால் மறுக்கப்பட்டுவந்தநிலையில், இன்று தஞ்சையை தவிர எங்கும் செல்லக்கூடாது, பத்திரிக்கையாளர்களை சந்திக்கக்கூடாது என்கிற நிபந்தனைகளோடு 15 நாள்பரோல் வழங்கப்பட்டது.

 

 பெங்களுருவில் இருந்து காரில் புறப்பட்டு தஞ்சைக்கு வந்தார். அவரோடு நான்கு கார்கள் மட்டுமே வந்தது. அதே நேரத்தில் சென்னையில் இருந்து நடராஜனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சைக்கு கொண்டுவரப்பட்டது. ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பே திருச்சிக்கு வந்துவிட்ட சசிகலா திருச்சி துவாக்குடி டோல்கேட்டில் ஆம்புலன்ஸ் வரும்வரை 35 நிமிடம் காரிலேயே காத்திருந்தார். அவரோடு வந்த பெங்களுரூ புகழேந்தியும் கட்சிக்காரர்களும் முன்னாடியே வந்துவிட்டனர். 

 

நடராஜனின் உடல் சுமந்துவந்த ஆம்புலன்ஸ்க்கு பின்னாடியே 6.45 க்கு தஞ்சை வந்து சேர்ந்தார். அங்கு மாலை நான்கு மணிக்கே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியிருந்தது. 

 

நடராஜனின் உடல் தஞ்சையில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நாளை மாலை நான்கு மணிக்கு ஊர்வலமாக சென்று விளார் அருகே அடக்கம் செய்யப்படவுள்ளது. 


தஞ்சைக்கு டி,டி,வி,தினகரன் உள்ளிட்ட அவரது ஆதரவு எம்,எல்,ஏக்கள் அனைவரும் ஆஜராகியுள்ளனர். 

 

காலை 11 மணியில் இருந்து திவாகரனும் அவரது ஆதரவாளரான திருவாரூர் மா,செ எஸ்,காமராஜீம் துக்கம் விசாரிக்க வருபவர்களை அனுசரித்து அனுப்பிக்கொண்டிருந்தார். அவரது மகன் ஜெய்ஆனந்தும் திவாகரன் மனைவியும் நடராஜன் உடல் வருவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பே வந்தனர். 

 

தஞ்சை அருளானந்தம் நகரமே மாலை 4 மணி முதல் பரபரப்பாகியிருக்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

நடராஜன் ஒரு கடின உழைப்பாளி,மேட்ச்வின்னர்; புகழ்ந்து தள்ளிய இந்திய வேகம்!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 Natarajan is a hard worker, match winner; Praised by Indian pacer

நடராஜன் ஒரு கடின உழைப்பாளி, அவர் ஒரு மேட்ச்வின்னர் என்கிற பாராட்டைப் பெற்றுள்ளார் தமிழ்நாடு வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்.

ஐபிஎல் 2024இன் 35 ஆவது லீக் ஆட்டம் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி வழக்கம் போல அட்டகாசமாய் ஆரம்பித்தது. பந்துகளை சிக்சருக்கு அனுப்புவதை மட்டுமே எண்ணமாக வைத்து ஹெட் சிறப்பாக ஆடினார். 16 பந்துகளில் அரைசதம் கடந்தார். 

ஹெட்டின் அனுபவ பேட்டிங்கை தூக்கி சாப்ப்பிடும் அளவுக்கு அபிஷேக் ஷர்மாவின் பேட்டிங் இருந்தது. 12 பந்துகளில் 6 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.பவர்பிளேயின் முதல் 6 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து, பவர்பிளேயில் அதிக ரன்கள் எடுத்த அணி என்கிற கொல்கத்தா அணியின் சாதனையை முறியடித்தது. ஹெட் 32 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். நித்திஷ் ரெட்டி 37, ஷபாஸ் அகமது 59 என மிரட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகளும், அக்சர், முகேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் இமாலய இலக்கை எதிர்கொண்ட டெல்லி அணிக்கு தொடக்கம் சொதப்பினாலும், அந்த அணியின் ஜேக் ஃப்ரேசர் பேட்டில் இருந்து பட்டாசு சிதறுவது போல பவுண்டரிகளும், சிக்சர்களும் வெடித்து சிதறியது.18 பந்துகளில் 7 சிக்சர்கள் 5 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து அபிஷேக் பொரேல் 42, பண்ட் 41 தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 10 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

 Natarajan is a hard worker, match winner; Praised by Indian pacer

ஆட்டம் நிறைவடைந்த பின்பு மூத்த வீரர் புவனேஷ்வர் குமாரிடம் வெற்றி குறித்து கருத்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர் “இவ்வளவு ரன்களை நாங்கள் எடுத்து அதை எதிரணி துரத்தும் போது நாங்கள் அதிகமாக ரன்களை வாரி வழங்கினோம் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் எங்கள் திட்டங்களை செயல்படுத்த விரும்பினோம். நீங்கள் விக்கெட் எடுக்கத் தொடங்கி விட்டால் எல்லாம் சரியாக நடக்கும். நடாரஜன் யார்க்கர் வீசுவதில் வல்லவர் என்பது எங்களுக்கு தெரியும். அவர் அமைதியான ஒரு வீரர் மற்றும் கடின உழைப்பாளி. சொல்லப்போனால் நடராஜன் உண்மையில் ஒரு மேட்ச் வின்னர். ஐபிஎல் ஆரம்பித்து இத்தனை வருடங்களில் எங்கள் பேட்டிங் இந்த அளவு சிறப்பாக இருப்பது இதுதான் முதல்முறை. இப்போது எங்களுக்கு 200 முதல் 220 ரன்களே குறைவான் இலக்கு போலத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு எங்கள் பேட்டிங் யூனிட் உள்ளது. வலைப்பயிற்சியில் அபிஷேக் மற்றும் ஹெட்டின் பேட்டிங் பயிற்சியில் பந்து வீசியதின் மூலம் என்களை மெருகேற்றிக் கொண்டோம். பேட்டிங் உங்களுக்கு ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற்றுத் தரும். பவுலிங் தான் உங்களுக்கு சாம்பியன்ஷிப்பைப் பெற்றுத் தரும்” என்றார்.

Next Story

கிரிக்கெட் வீரர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித் - புகைப்படங்கள் வைரல்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajith kumar in cricketer natarajan birthday party

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். ஐபிஎல் தொடரில்,  சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவருடைய பந்துவீச்சு, பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக “யார்க்கர் கிங்” என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் இந்திய அணிக்காக விளையாடினார். அப்போது இந்திய அணி வெற்றி பெற அவருடைய பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது. 

இதனிடையே தனது சொந்த ஊரில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் மைதானம் தொடங்கி நடத்தி வருகிறார். இவரது பயோ-பிக் உருவாகுவதாகவும் அதில் சிவகார்த்திகேயன் நடராஜனாக நடிக்கவுள்ளதாகவும் 2022ஆம் ஆண்டு தகவல் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் அதுகுறித்து வெளியாகவில்லை. 

ajith kumar in cricketer natarajan birthday party

இந்த நிலையில், இன்று நடராஜன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி இரவு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். மேலும் நடராஜனுக்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் இந்த விழா நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட், பேட், அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.