Skip to main content

2023-ன் விளைவு? என்ன செய்யப்போகிறார் ஆளுநர்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
The first session of the Assembly meeting what governor gonna do

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தமிழ்நாடு சட்டமன்றம் கூடுவது வழக்கம். ஆண்டின் முதல் கூட்டத்தில் மாநிலத்தின் ஆளுநர் பங்கேற்று உரையாற்றுவது வழக்கம். இது ஒவ்வொரு வருடம் நிகழும் நிகழ்வுதான் என்றாலும், இந்தமுறை அரசியலை கூர்ந்து நோக்குவோரிடத்திலும், பொதுமக்களிடத்திலும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. 

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டம் கூட்டுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், இந்த ஆண்டாவது அரசு தயாரித்துத் தரும் உரையை ஆளுநர் ஆர்.என். ரவி வாசிப்பாரா? அல்லது கடந்த ஜனவரியில் உரையை மாற்றிப் படித்ததன் மூலம், அரசின் பெரும் கண்டனத்தைச் சந்தித்து, பாதியிலேயே சபையில் இருந்து எழுந்து சென்றது போல், இப்போதும் ஆளுநர் ரவி நடந்துகொள்வாரா? என்கிற விவாதமும் எதிர்பார்ப்பும் பல தரப்பிலும் எழுந்திருக்கிறது. 

இதே விவாதம் ஆளுநரின் ராஜ்பவன் அதிகாரிகள் மத்தியிலும் நடந்து வருகிறதாம். ஆளுநருக்கு நெருக்கமான உயரதிகாரிகள் சிலர், இந்தமுறை உச்ச நீதிமன்றத்தின் பார்வை நம் பக்கம் திரும்பியிருப்பதால், பிரச்சனைக்கு இடம்கொடுக்காமல், தி.மு.க. அரசு தயாரித்துத் தரும் உரையை நீங்கள் அப்படியே படிப்பதுதான் நல்லது என்று அறிவுறுத்தி வருகிறார்களாம். ஆனாலும் இதற்கு ஆளுநர் எந்த ரியாக்ஷனையும் காட்டவில்லை எனவும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், இன்று திருச்சி சர்வதேச விமான முனையம் திறப்பு விழா மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சரும், ஆளுநரும் ஒன்றாக கலந்துக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் உள்ள மசோதக்கள் குறித்து ஆலோசிப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஆளுநரின் அழைப்பை  ஏற்று சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை ராஜ்பவனில் சந்தித்தார். அப்போது ஆளுநர் வாசல் வரை வந்து முதல்வரை வரவேற்றதும் குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

“தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” - தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Tamil Nadu Chief Minister's ordered Drinking water should be distributed without interruption

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அதிகரிக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்ககளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-04-24) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பேசியதாவது, “கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.