Skip to main content

எச்.ராஜா ஒரு முந்திரிக்கொட்டை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கிண்டல்

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

 

சென்னையில் செய்தியாயளர்களை சந்தித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
 

அப்போது, என்னைப் பொறுத்தவரை ஈரோட்டில் போட்டியிட விரும்பினேன். கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் மேலிடம் எந்த தொகுதியில் போட்டியிட சொல்கிறதோ அங்கு போட்டியிடுவேன். போட்டியிட வாய்ப்பு அளிக்காவிட்டாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் உள்ள 40 வேட்பாளர்கள் வெற்றிபெற பாடுபடுவேன். 


 

evks elangovan



பாஜக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தேசிய தலைமை வெளியிடுவதற்கு முன்பு எச்.ராஜா தன்னிச்சையாக வெளியிட்டுள்ளாரே?

 

எச்.ராஜாவை பொறுத்தவரை அவர் ஒரு முந்திரி கொட்டை. மேலிடம் அறிவிப்பதற்கு முன்பாகவே அவர் அறிவித்திருக்கிறார். மேலிடம் அறிவிக்கும்போது பட்டியலில் எச்.ராஜா இருக்கிறாரா? அல்லது ஆட்டுப்பட்டியிலே அடைபடப்போகிறாரா என்று பார்க்கலாம். 

 

அதிமுகவைப் பொறுத்தவரையில் தோல்வி பயத்தில் மிகவும் மிரண்டு போயிருக்கிறார்கள். எப்படியாவது டெபாசிட் வாங்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் கொடுக்கிறோம், ஆயிரத்து 500 ரூபாய் என்று சொல்லுகிறார்கள். ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்கூட அதிமுக - பாஜக கூட்டணி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாது. இவ்வாறு கூறினார். 


 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நாடாளுமன்றத்தில் ஹெலிகாப்டர் மூலம் இறங்கிய என்.எஸ்.ஜி வீரர்கள்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
NSG soldiers landed in parliament by helicopter

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இறங்கி ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்து  அத்து மீறி சிலர் வண்ணத்தை உமிழும் பொருட்களை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திற்குள் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதனையடுத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு விமர்சனங்களையும் கருத்துகளையும் வைத்திருந்தனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக என்.எஸ்.ஜி வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் டெல்லி நாடாளுமன்றத்தின் வளாகத்திற்குள் இறங்கி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.