Skip to main content

“2024க்கு முன்பு திமுக ஆட்சி இழக்கும்” - ஜெயக்குமார் 

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

"DMK will lose power before 2024" - Jayakumar

 

அ.தி.மு.க.வின் பொன்விழா மாநாடு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி பல சிக்கல்களுக்கு இடையில் நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் பணியாற்றிய குழுவினர்களை சென்னையில் அழைத்து எடப்பாடி பாராட்டியுள்ளார். அதில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை வெற்றிபெற முழுமையாக உழைக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார்.

 

அ.தி.மு.க.வின் பொன்விழா மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 20 நடைபெற்றது. இதில், அ.தி.மு.க வைச் சேர்ந்த பல தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். அதில், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், மதிய உணவில் சில பிரச்சனைகள் இருந்ததால், மாநாடு சலசலப்புகளை சந்தித்தது. இந்நிலையில், அந்த மாநாட்டில் பணியாற்றிய குழுவினர்களை, சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. அலுவலகத்திற்கு அழைத்து எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார். நிகழ்வில், அவருக்கு நினைவுப்பரிசையும் கட்சியினர் வழங்கியுள்ளனர். பின்னர், மாவட்டச் செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள், எம்.எல்.ஏ., எம்.பி. கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், எடப்பாடி, " ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சூழல் உருவாகி வருவதால், தேர்தலுக்கு ஆயத்தமாக" கட்சியினரை அறிவுறுத்தினார். தொடர்ந்து, அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற உழைக்க வேண்டும் எனவும் பேசினார்.

 

நிகழ்ச்சி முடிந்து, பத்திரிகையாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “தி.மு.க விற்கு மக்களிடம் அதிருப்தி நிலை ஏற்பட்டிருக்கிறது. மாறாக, அ.தி.மு.க.வின் மீது மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. மக்களும் அடுத்த தேர்தல் வரும் நாளை நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில், தி.மு.க. பல தொகுதிகளுக்கு செல்ல முடியாத சூழலும் நிலவி வருகிறது. அதேசமயம், 'ஆட்சி போனாலும் கவலையில்லை' என அமைச்சர் உதயநிதி பேசுகிறார். இருந்தாலும் இந்த தி.மு.க. ஆட்சி 2024 தேர்தலுக்கு முன்பே ஆட்சியை இழந்துவிடும். எனவே, மக்களுக்கு விருப்பமில்லாத ஆட்சி இழக்க வேண்டிய ஆட்சிதான். தொடர்ந்து தமிழ்நாட்டில், தி.மு.க. ஆட்சியில், மின் கட்டணம், வீட்டு வரி, சொத்துவரி, பதிவுக் கட்டணம் ஆகியவை உயர்ந்துள்ளது. இது போன்று நிறைய பிரச்சனைகள் தமிழ்நாட்டில் எழுந்துள்ளது. 

 

இதற்கு உதாரணமாக, ரோம் நகரம் தீயில் எரிகின்ற சமயத்தில் நீரோ மன்னன் பிடில் வாசித்ததை போலத்தான் சனாதன பிரச்சனையை எழுப்பி மக்களை திசை திருப்பியுள்ளது தி.மு.க. மத உணர்வுகளை இழிவுபடுத்துவது தவறுதான். இதற்கு, இஸ்லாமிய அமைப்புகள் கூட கண்டனம் தெரிவித்தது. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தி.மு.க.விடம் சமத்துவம் இருக்கிறதா? ஏன், இந்தியா கூட்டணியில் இருக்கும் டி.ராஜா, சீதாரம் யெச்சூரி அவர்களை தலைவராக நியமிக்கலாமே? சொல்லப் போனால், அ.தி.மு.க தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை பொது தொகுதியில் நிற்கவைத்து வெற்றிபெறவும் வைத்தது. எனவே, எங்கள் ஆட்சி காலத்தில்தான் சமத்துவம் இருந்தது” என அவர் பேசியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.