Skip to main content

திமுக தலைமையில் மாபெரும் பேரணி..! கூட்டணிக் கட்சிகளின் அணிவகுப்பு. (படங்கள்)

Published on 23/12/2019 | Edited on 23/12/2019

 

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான திமுக கூட்டணிக் கட்சிகளின் பேரணி அமைதியான முறையில் முடிந்தது. 

எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் தொடங்கிய பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கே.எஸ்.அழகிரி, கி.வீரமணி, வைகோ எம்.பி, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் எம்.பி, காதர்மொய்தீன், ஜவாஹிருல்லா, பா.சிதம்பரம், வேல்முருகன், ஈஸ்வரன், கனிமொழி எம்.பி, தயாநிதிமாறன் எம்.பி, உதயநிதி ஸ்டாலின், சுப, வீரபாண்டியன், தமிமுன் அன்சாரி ஐஜேகேவின் ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்றவர்கள் குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி முழக்கத்தை எழுப்பினர். இந்த பேரணியில் சுமார் 50,000- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

சார்ந்த செய்திகள்