Skip to main content

என்கவுண்டர் எடப்பாடியை கண்டித்து 28ல் தேமுதிக ஆர்ப்பாட்டம் - தமிழகமெங்கும் பங்கேற்போர் விவரம் 

Published on 26/05/2018 | Edited on 26/05/2018
vijayakanth

 

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தேமுதி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  இதில் பங்கேற்போர் விபரம் குறித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிறுவனத் தலைவர், கழக பொதுச்செயலாளர்  விஜயகாந்த் அறிவிப்பு:

 

’’தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி வாழும் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொழுது பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய என்கவுண்டர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் 28.05.2018 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்டமாக ஒன்று சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகளும், கழக தொண்டர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


  
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்பவர்கள் விவரம்:

பிரேமலதா விஜயகாந்த்    -காஞ்சிபுரம் மாவட்டம், அழகாபுரம்.ஆர்.மோகன்ராஜ்,Ex:MLA கழக அவைத்தலைவர்    - சென்னை மாவட்டம், எல்.கே.சுதீஷ் கழக துணை செயலாளர்    - திருவள்ளூர் மாவட்டம்,  ப.பார்த்தசாரதி,Ex:MLA,  கழக துணை செயலாளர்    - திருவண்ணாமலை மாவட்டம், .ஏ.எஸ்.அக்பர் கழக துணை செயலாளர் -    ஈரோடு மாவட்டம், பேராசிரியர்.எஸ்.சந்திரா கழக துணை செயலாளர்    - தேனீ மாவட்டம், எம்.ஆர்.பன்னீர் செல்வம் கழக வழக்கறிஞர் அணி செயலாளர் /  கழக உயர்மட்ட குழு உறுப்பினர் -    புதுக்கோட்டை மாவட்டம், 

 

பி.கிருஷ்ணமூர்த்தி கழக உயர்மட்டகுழு உறுப்பினர் -    வேலூர் மாவட்டம், ஜெ.பாலன் கழக உயர்மட்டகுழு உறுப்பினர் -    சிவகங்கை மாவட்டம், செல்வ.அன்புராஜ் கழக கேப்டன் மன்ற செயலாளர் -    திண்டுக்கல் மாவட்டம், P.ராஜாசந்திரசேகர் கழக கேப்டன் மன்ற துணை செயலாளர்    -  அரியலூர் மாவட்டம், கே.ஏ.சுல்தான்பாஷா
கழக கேப்டன் மன்ற துணை செயலாளர் -    பெரம்பலூர் மாவட்டம், ஈ.எம்.பொன்னுசாமி கழக கேப்டன் மன்ற துணை செயலாளர் -    நீலகிரி மாவட்டம் கு.நல்லதம்பி,E                x:MLA.,கழக இளைஞர் அணி துணை செயலாளர்    - கிருஷ்ணகிரி மாவட்டம், 

 

மாலதி வினோத் கழக மகளிர் அணி செயலாளர்-    நாமக்கல் மாவட்டம், சுபமங்கள டில்லிபாபு கழக மகளிர் அணி துணை செயலாளர்    - கடலூர் மாவட்டம், பா.ஜான்சிராணி கழக மகளிர் அணி துணை செயலாளர்    - திருநேல்வேலி மாவட்டம், ஏ.எம்.ஜி.விஜயகுமார் கழக மாணவர் அணி செயலாளர் -    நாகப்பட்டினம் மாவட்டம், எஸ்.கணேசன் கழக தொண்டர் அணி செயலாளர்    - விழுப்புரம் மாவட்டம், எஸ்.எஸ்.எஸ்.யு.சந்திரன் கழக வர்த்தக அணி செயலாளர்-    தருமபுரி மாவட்டம்,

 

டாக்டர்.ப.இராமநாதன் கழக மருத்துவர் அணி செயலாளர்    -கரூர் மாவட்டம், .கோதை.எஸ்.மாரியப்பன் கழக நெசவாளர் அணி துணை செயலாளர் -    இராமநாதபுரம் மாவட்டம், எம்.வி.எஸ்.இராஜேந்திரநாத் கழக கலை-இலக்கிய அணி துணை செயலாளர்    - மதுரை மாவட்டம், சிங்கை.கே.சந்துரு கழக கலை-இலக்கிய அணி துணை செயலாளர்    - திருப்பூர் மாவட்டம், ஜி.காளிராஜன் தொழிற்சங்க பேரவை செயலாளர்-    தஞ்சாவூர் மாவட்டம், எஸ்.முஜிபூர் ரஹ்மான் தொழிற்சங்க பேரவை பொருளாளர்    - திருச்சி மாவட்டம், 

 

டி.கே.விஜய் வெங்கடேஷ் தொழிற்சங்க பேரவை துணை தலைவர்- கன்னியாக்குமரி மாவட்டம், எஸ்.மாதவன் தொழிற்சங்க பேரவை துணை தலைவர் - திருவாரூர் மாவட்டம்,  பி.வேணுராம் தொழிற்சங்க பேரவை துணை செயலாளர்    - கோவை மாவட்டம்,  தா.ஆதிளிங்கபெருமாள் தொழிற்சங்க பேரவை துணை செயலாளர்-    விருதுநகர் மாவட்டம், ஆர்.உமாநாத் முன்னாள் கழக துணை செயலாளர்-    சேலம் மாவட்டம்.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.